பின்பற்றுபவர்கள்

30 டிசம்பர், 2010

மணிப்பவள எச்சங்கள் வாழும் இடங்கள் !

இன்றைய தமிழின் தூய்மை ஒரே நாளில் வந்தவை அல்ல, தமிழார்வளர்கள் கதைகள், கட்டுரைகள், செய்திகள் ஆகியவற்றிலும், திங்கள், கிழமை, நாள் இதழ்களில் எழுதியதை திரும்பத் திரும்பப் படித்து ஓரளவு தமிழை தூய்மைப்படுத்திக் கொண்டுள்ளோம், தனித் தமிழ் முன்னோடிகளாகக் கருதப்படுவர் மறைமலை அடிகளாரும், பரிதிமார் கலைஞரும் ஆவர்கள் இவர்கள் தான் தம் பெயரில் வேதாச்சலம் மற்றும் சூரிய நாராயண சாஸ்திரி தமிழில் இல்லை என்பதால் பெயரையே மாற்றிக் கொண்டார்கள், வடசொல் சாஸ்திரிக்கு தமிழில் கலைஞர் என்று பொருளாம், கருணாநிதியை சாஸ்திரி என்று வடமொழிக்காரர்கள் சொன்னால் அது சரிதான் :)

தனித் தமிழ் நடைமுறைக்கு வந்து 60 ஆண்டுகள் காலம் ஆகிவிட்டாலும் இன்னும் வழிபாட்டுத்தளங்களில் வசதியாகத் தூங்கிக் கொண்டு இருக்கின்றன வடமொழிக் கலந்து எழுதப்பட்ட எச்சச் சொற்கள். கோவில்களில் கேட்டிருக்கக் கூடும், 'பிரசாதம் வினியோகித்தார்கள்' இதைக் கேட்க தெய்வீகமாக இருப்பதாக பலர் நம்புகிறார்கள், பிரசாதம் என்பது தமிழில் அழகாக 'திருவமுது' என்றும் விநியோகம் என்பதை 'வழங்கள்' என்றும் சொல்லலாம். இந்த தமிழ் சொற்கள் நமக்கு புதியவையும் அன்று. ஆனாலும் வரட்டுகளினால் இவற்றை மாற்றிக் கொள்ள கோயில் பணியாளர்களோ, தேவமொழி மற்றும் உயர்மொழி என்பதாக அறியாமையில் இருக்கும் அன்பர்களோ நினைப்பதில்லை.

அதுபோல் உபயம் என்ற சொல் 40 ரூபாய்க்கு வாங்கி கோவிலுக்குக் கொடுக்கும் குழல் விளக்கில் இன்னார் உபயம் என்று வெளிச்சத்தை மறைக்கும் அளவுக்கு எழுதி இருப்பார்கள். உபயத்திற்கு நமக்கு பொருள் தெரியும் என்றாலும் அது போல் சொல் தமிழில் இல்லையா என்று பல்ர் நினைப்பதே இல்லை, திருப்பணி என்றச் சொல் பலகாலமாக புழக்கத்தில் உள்ளது, அதை உபயத்திற்கு மாற்றாக பயன்படுத்தலாமே

கோயில் தொடர்பிலேயே பலத் தமிழ் சொற்கள் நமக்கு தெரிந்தவையே, அவற்றை பயன்படுத்தலாமே

பிரகாரம் > சுற்று (வலஞ்சுழி, வலம்)
அங்கப்பிரதட்சனம் > உருளுதல்
தட்சனை > காணிக்கை
நைவேத்யம் > படையல் அல்லது படைத்தல்
ஹோமம் > வேள்வி
தரிசனம் > திருக்காட்சி
தீ(ப) ஆராதனை > (தீ) அல்லது விளக்கு ஆராட்டு
வாத்தியம் > இசைக்கருவி
பூஜை > பூ(வீனால்)செய் > பூசை
ஷேவி > வணக்கு அல்லது வழிபடு
அர்சனை > துதி செய்தல் அல்லது போற்று
ஆபரணம் > நகை
ஒட்டியாணம் > இடுப்பை ஒட்டிய ஆணம் > ஆணம், அணங்கு இவற்றிற்கு கட்டுதல் என்று பழந்தமிழில் பொருள் > இடுப்பணி என்று சொல்லலாம்
காட்சி > காணுதல் > காட்டுதல் என்ற தமிழ் திரிபே காட்சி, தோன்றுதல் என்றும் சொல்லலாம்
உபநயணம் > பூணு(ம் நூ)ல்
விபூதி > திருநீறு
நாமம் > திருமண்
சன்னதி > கோ....இல் > கோயில்
கற்பகிரகம் > (மூலவர்) உறைவிடம்

இந்துக் கோவில் மட்டுமல்ல அல்லேலோயா மற்றும் கிறித்து வழிபாட்டுத்தளங்களிலும் வடசொற்களே மிகவும் புழக்கத்தில் இருக்கின்றன.

ஆண்டவராகிய ஏசு கிறித்து ஜீவித்து இருக்கிறார் என்று சொல்லுவார்கள், ஜீவித்தல் என்றால் உயிரோடு இருத்தல் என்றே பொருள்.

பரிசுத்த ஆவி > அதி தூய ஆவி

ஆண்டவர் உங்களை ரட்சிக்கிறார் > ஆண்டவர் உங்களை அருளாசிக்கிறார்

தேவனுடைய கிருபையினாலும் > கடவுளுடைய அன்பினாலும்

தேவனுடைய மகிமையினாலும் > கடவுளுடைய சிறப்பினாலும்


வெளி 22:14 ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.

-இதன் பொருள்

உயிர்மரத்தின்மேல் உரிமையுள்ளவராவதற்கும், வாசல்வழியாக நரகத்திற்குள் நுழைவதற்கும், அவருடைய கற்பனைகளின் படி செய்பவர்கள் கொடுப்பனையாளர்கள்

என்று இருக்க வேண்டும், நான் படித்த வரையில் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு மணிபவளத்திலேயே எழுதப்பட்டுள்ளது, இவற்றை செந்தமிழுக்கு மாற்றி எழுத இன்னும் கிறித்துவ அன்பர்கள் முயற்சி மேற்கொள்ளவில்லை. மேலும் திருப்பலி வழிபாண்டின் போது வடமொழி கலந்த மணிப்பவளத்தைத் தான் பயன்படுத்துகிறார்கள். இஸ்லாமியர்கள் வடமொழிக்கு மாற்றாக (பாங்கு,துவா இன்னும் பல) அரபுச் சொற்களை வைத்துள்ளார்கள்.

******

வழிபாட்டுத்தளங்களில் புழங்கும் சொற்கள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு தமிழ் சொற்களையே பயன்படுத்துவது தமிழை மேலும் தூய்மையாக்கும்.

நேரம் கிடைக்கும் போது மேலும் சில இதுபோல் எழுதுகிறேன்

29 டிசம்பர், 2010

திருமா அறிமுகப்படுத்திய தமிழ் கொடி !

தமிழ் கொடி என்றதும் தமிழ் தீவிரவாதிகள், பிரிவினைவாதிகளின் இந்திய இறையாண்மையை சிதைக்கும் திட்டமிட்ட சதி என்று தேசியவாதிகள் கிலி பிடித்து உளறுவார்கள். தேசியம் என்கிற பெயரில் மாநில உரிமைகளும்,, மாநில மொழியும் அழிந்து போகாமல் இருக்க மொழி உணர்வை மேம்படுத்த தமிழ் நாட்டிற்கு தனிக் கொடி தேவை என்பதை நான் வழிமொழிகிறேன். தேசியவாதிகள் பயந்து மிரள மாநிலக் கொடிகள் என்பவை ஒரு அடையாளம் என்பது தவிர்த்து எதுவும் இல்லை, அண்டைமாநிலம் கர்நாடகாவில் ஏற்கனவே கர்நாடகா மாநிலத்திற்கான தனிக் கொடி இருந்துவருகிறது, வாட்டாள் நாகராஜ் ஏந்துவது கர்நாடக மாநிலக் கொடியைத்தான்.

தமிழர்களுக்கான அடையாளம் மொழி, மொழி என்பது பண்பாட்டு அடையாளம் மட்டுமே, இவற்றை குறியீடாகக் கொள்ள முடியாது. உலகமெங்கும் குறீயீடுகள் மக்கள் இனக் குழுவை அடையாளப்படுத்த ஏற்படுத்தப்படுவது நடைமுறைதான். நிலம்சார்ந்த வகையில் தமிழ் நாடு என்று சொல்லப்படுவதற்கு வெறும் வரைபடம் தவிர்த்து எந்த அடையாளமும் இல்லை. தற்போது தமிழ் கொடி அமைத்திருப்பது வரவேற்க்கக் கூடிய ஒன்று, இதை என்றோ செய்திருக்க வேண்டும்.

தற்போது திருமாவால் வடிவமைக்கப்பட்டு திக தலைவர் வீரமணி அவர்களால் ஏற்றப்பட்டது. தமிழ் தனிக்கொடிக்கு முதல்வர் கருணாநிதியின் ஒப்புதல் எதுவும் இல்லை. மேலும் இதனை விரும்பவும் இல்லை, காரணம் தேசியவாத காங்கிரசை பகைத்துக் கொள்ள நேரிடும் என்பதே.

தமிழ் கொடி பற்றிய சிந்தனையும், செயல்படுத்தலும் சரிதான், இருந்தாலும் இதுபற்றி பல்வேறு தரப்புகளிடம் விவரித்து, பல்வேறு வடிவமைப்புகளாக வைத்து ஒன்றை தெரிவு செய்திருக்கலாம், அரசியல் கட்சிகளிடம் ஒற்றுமையான கருத்துகளோ, ஏற்புகளோ கிடைத்திருக்காது. ஆனால் பொதுமக்களிடம் கருத்தும் வாக்கெடுப்பும் நடத்தி இருக்கலாம்.

கொடியில் தமிழ் நாட்டின் சின்னங்கள் எதுவுமே இல்லை. தமிழ் நாடு பஞ்சு உட்பட விவசாயத்திற்கு பெயர் பெற்ற மாநிலம், மீன்பிடித் தொழில் பெயர்பெற்றது, பல்வேறு சமய / மத / மற்றும் பகுத்தறிவு சிந்தனைகள் நிறைந்த மாநிலம். இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு இவற்றை காட்டும் வடிவமைப்பு கொடியில் இருந்தால் நன்றாக இருக்கும்.


அவசர கெதியில் 'நான் தான் பெயர் பெற வேண்டும்' என்று கட்டிய தமிழ்நாட்டு தலைமைச் செயலகத்தைப் பாருங்கள், எனக்கு அது பிடிக்கவே இல்லை. தமிழ் நாட்டின் முகப்பைக் காட்டுவதாக, கட்டிடக் கலையைக் காட்டுவதாக கட்டிடம் அமைந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டின் எந்த ஒரு சின்னமும் தலைமை செயலக கட்டிடத்தில் இல்லை. எண்ணை தொழிற்சாலையில் இருக்கும் சேமிப்பு தொட்டி ஒன்று பெரிதாக இருந்தால் எப்படி இருக்குமோ, அல்லது நெல் அரவை மில்களின் ஊரல் தொட்டிகள் பெரிதாக இருந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது தலைமைச் செயலகம்.

சிற்பகக் கலைக்கும் / கோபுரங்களுக்குப் பெயர் போன தமிழ் நாட்டில், தாம் தமிழர்களின் அடையாளம் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவரால் கட்டிமுடிக்கப்பட்ட தலைமைச் செயலகம். பாதி வரை ஈயம் பூசப்பட்ட கவிழ்த்து வைத்த கரிபிடித்த அண்டாவைப் போலவே இருக்கிறது என்று காணும் போதெல்லாம் வருத்தம் கொள்கிறேன்.

தமிழ் கொடியும் அவ்வாறில்லாமல் தமிழர் பண்பாட்டைச் சொல்லும் அடையாளங்கள் அதில் இருக்க வேண்டும், கொடி அமைத்தல் நல்லச் செயல், தேவையும் கூட என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. திருமாவின் முன்னெடுப்பும், திக வீரமணியின் ஒப்புதலும் நல்ல துவக்கம். ஆனால் இதுவே இறுதி என்பதை ஏற்கமுடியவில்லை. கொடியை மாற்றி அமைத்து பொதுமக்களின் ஒப்புதல் பெறுவது சரியான நடைமுறையாக இருக்கும்.

சுட்டிகள் :

தமிழர் இறையாண்மை மாநாடு புகைப்படத் தொகுப்பு


கூட்டணியில் இருக்கிறோம்... கூட்டம் போடத் தவிக்கிறோம்!

27 டிசம்பர், 2010

கலவை 27 டிச 2010 !

சென்றாண்டும் அதற்கும் முந்தய ஆண்டும் எழுதிய இடுகைகள் எண்ணிக்கைக்கு ஈடு கொடுத்து இந்த ஆண்டு எழுத முடியவில்லை. காரணம் இல்லத்தின் புதிய வரவும், ஐபோனில் பதிவுகளை படிப்பதாலும் , கொஞ்சம் பணிச் சுமையும் முதன்மைக் காரணங்கள். இருந்தாலும் இரண்டு நாளைக்கு ஒரு இடுகை என்கிற கணக்கில் 175 இடுகைகள் வரை எழுதி இருக்கின்றேன். இந்த ஆண்டின் புதிய வரவாக பல புதிய பதிவர்கள் கலக்கிவருகிறார்கள், பன்னிக்குட்டி இராமசாமி, சிரிப்புப் போலிஸ், நீச்சல்காரன், வெளியூர்காரன், பட்டாபட்டி போன்றோர் நகைச்சுவையில் வூடு கட்டி விளையாடுகிறார்கள். வழக்கம் போலவே இந்த ஆண்டும் பதிவர்களிடையே சில கசப்பான தனிமனித தாக்குதல்கள் நடந்தேறிவிட்டன. அவை மறக்கப்பட வேண்டியவை. நித்தியானந்ததின் நசுங்கிய சொம்பு சரி செய்ய முடியாத அளவுக்கு சேதப்படுத்தப்பட்டது பதிவுலகினரால். திமுக ஆட்சியும் ஸ்பெக்ட்ரம் விவகாரங்களும் பலமான விமர்சனத்துக்குள்ளாயின. முதல் செம்மொழி மாநாடு 90 விழுக்காட்டுப் பதிவர்களால் புறக்கணிக்கப்பட்டது.

இந்த ஆண்டு வெளியான படங்களில் அங்காடித்தெரு, களவானி மற்றும் மைனா பெருவாரியான பதிவர்களால் பாராட்டி எழுதப்பட்டது. இந்த ஆண்டு மிகுதியான விமர்சனத்துக்குள்ளான படம் 'உன்னைப் போல் ஒருவன்', மிகுதியாக பேசப்பட்டப் படம் எந்திரன், எதிர்மறையான விமர்சனங்களும் அதற்கு குறைவு. ஏமாற்றிய திரைப்படம் இராவணன். அப்துல்லா, ஸ்வாமி ஓம்கார், கேபிள் சங்கர், தமிழ்மணம் சங்கரபாண்டி மற்றும் நைஜீரியா இராகவன் ஆகியோர் சிங்கப்பூருக்கு வந்து சென்றனர். எங்களது மணற்கேணி போட்டியின் வெற்றியாளர்களாக மருத்துவர் தேவன்மாயம், தருமி ஐயா மற்றும் முனைவர் பிரபாகர் ஆகியோர் வந்து சென்றனர்.

****'*

அரசியல் பலிவாங்களுக்காக சீமான் கைது செய்யப்பட்டார். ஜெ ஆட்சியின் போது நக்கீரன் கோபால் மற்றும் சுப வீரப்பாண்டியன் ஆகியோர் பொடோ சட்டத்தின் வழியாக கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டதைப் போன்று இதுவும் அப்பட்டமாக கருணாநிதிக்கு சீமான் மீது இருந்த பய மற்றும் காழ்புணர்வை காட்டியது. சீமான் கைதுக்கு தேசவிரோதம் என்கிற சப்பைக்காரணங்கள் கூறப்பட்டதை கட்சியினர் தவிர்த்து, காங்கிரசார் தவிர்த்து யாரும் ரசிக்கவில்லை. அரசியல்வாதிகள் மேடைப் பேச்சுகளில் தனிமனித தாக்குதல் இன்றி எதுவுமே இருக்காது, தமிழக மீனவனை சுட்டுக் கொன்றால் நாங்கள் பதிலுக்கு சிங்களவனை கொல்லுவோம் என்றது தேச துரோகமாம், பதிலுக்கு பதில் அல்லது பாதுகாப்பு, தற்காப்பு இவை அரசு சட்டங்களில் அனுமதிக்கப்பட்ட ஒன்று தான், துப்பாக்கி லைசன் கொடுப்பது துப்பாக்கியை துடைத்து பாதுகாப்பாக பொட்டியில் வைத்துக் கொள்ள அல்லவே. கால்நடைகள் கூட தன்னை தாக்குபவர்களை திருப்பித்தாக்கி தற்காத்துக் கொள்ள நினைக்கின்றன. தீங்குக்கு எதிர்ப்புக் காட்டாத உயிரனம் ஏது ? சீமான் பேசியது தேச துரோகமாம். கார்கில் போரில் இந்திய வீரர்களை கொன்று போட்டப் பிறகும், திட்டமிட்டு எப்போதும் வன்முறையை, தீவிரவாதிகளை ஏவிவிடும் பாகிஸ்தான் மீது இந்திய அமைச்சு நட்பு பாராட்டுவதும் பேச்சு வார்தைக்கு அழைப்பதும் தேசிய விரோத / துரோக நடவடிக்கை இல்லையா ? கொல்லப்பட்ட இந்திய இராணுவ வீரர்களுக்குத்தான் இது ஏற்புடையதா ? எப்படியோ சீமான் விடுதலை அடைந்துவிட்டார். பிறகு எதாவது செய்யமுடியுமா ? செய்கிறார்கள், புலிகளால் பெருந்தலைகளுக்கு ஆபத்தாம். இல்லாத புலியால் எங்கிருந்து ஆபத்து ? சீமான் மிகப் பெரிய அரசியல் சக்தியாக வளர்வார் என்பதை ஆட்சியாளர்களே ஊகிப்பதால் ஊகங்கள் கிளப்பிவிடப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

******

நம்புங்கள் தமிழ்நாட்டில் தலித் குடிசைகளே இல்லை, தமிழக முதல்வரின் பொற்கால ஆட்சியில் தலித்துகள் மற்றும் ஏழைகள் கோபுரங்களுக்கு குடி பெயர்ந்துவிட்டார்கள். இல்லை என்றால் இராஜிவின் அருமை மைந்தன் இராகுல் காந்தி தமிழக பயணத்தில் ஒரு குடிசையிலாவது நுழைந்து கேப்பங்கஞ்சி குடித்திருப்பார். வடமாநில ஏழைகளுக்கு கிடைக்கும் இராகுல் குடிசை நுழைவு பேரு தமிழக ஏழை குடிலுக்கு கிடைக்கவில்லை என்பதை அது போன்ற படங்கள் எதுவுமே வராத நாளிதழ்களைக் கண்ட போது தமிழ்நாட்டில் ஏழைகளே இல்லை என்பதை புரிந்து கொண்டேன். அப்பறம் இலவச வண்ணத் தொலைகாட்சி, பொங்கல் பரிசு பை இவற்றையெல்லாம் யார் தான் வாங்குகிறார்கள் அனைவரும் மாடிவீட்டு ஏழைகளோ என்னவோ.

******

தங்கபாலு செய்த காமடி : இராகுல் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் இளைஞர் காங்கிரசை சேர்ந்தவர் தான் என்று இந்தியில் லோ பேச, அதை தங்கபாலு 'தமிழகத்தின் இளைஞர் காங்கிரசை சேர்ந்தவர்களுக்கு பதவிகள் காத்திருக்கின்றன என்று மொழிப் பெயர்த்து வாங்கிக்கட்டுக்கொண்டாராம். திமுக கூட்டணியில் இருக்கும் போது தன்னிசையாக அடுத்த முதல்வர் பற்றிப் பேசக்கூடாது என்பற்காக தவறாக மொழிப் பெயர்த்திருக்கலாம், அடுத்த முதல்வரா ? அதற்கெல்லாம் கடுகளவும் கூட வாய்ப்பில்லை என்பதற்காக தவறாக மொழிப் பெயர்த்திருக்கலாம், இல்லாவிடில் இந்தி சரியாகப் புரியவில்லை என்பற்காக மொழிப் பெயர்த்திருக்கலாம், தலையில் சூரியனை வாங்கும் வயதில் கண்டிப்பாக தான் இளைஞர் காங்கிரசை சேர்ந்தவன் இல்லை என்பதற்காக காழ்புணர்வில் தவறாக மொழிப் பெயர்த்திருக்கலாம், எப்படியும் இதில் ஒன்றோ அல்லது மேற்பட்ட காரணங்களோ தான் தங்கபாலுவை அவ்வாறு மொழிப் பெயர்க்கச் செயதிருக்கிறது. இராகுலின் இளைஞர்களுக்கான முதல்வர் பதவி என்னும் செய்தியில் அடுத்து ஒரு இளைஞருக்குத்தான் பிரதமர் வாய்ப்பு என்கிற தகவலும் அடங்கி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டேன். நல்லாப் பேசுறாங்கையா பொடி டப்பாவையே வைத்து

****

தைப் பொறந்தா வழிப் பெறக்கும்னு மருத்துவர் இராமதாஸ் செப்புகிறார். இவரோட நிலைப்பாட்டைப் பார்த்தால் கண்டிப்பாக இவர் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குத்தான் செல்வார் என்று கருதுகிறேன். காரணம் ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றி மருத்துவர் இதுவரை வெளிப்படையாக வாய் திறக்கவில்லை. மருத்துவரைப் பொறுத்த அளவில் அரசியலில் மகனுக்கான மத்திய அமைச்சர் பதவி என்பதைப் தவிர்த்து மாபெரும் ஊழல் ஒரு பொருட்டே இல்லை போலும்.

****
மைனா படம் இப்பதான் பார்த்தேன். நிலம் சார்ந்த இயல்பான கதைகள் வெல்லும் என்பதை நிறுபனம் செய்யும் மற்றொருபடம். இவ்வளவு திறமைகள் வைத்திருக்கும் திரைத்துரையினர் மசாலாவில் ஏன் இவ்வளவு கவனம் செலுத்துகிறார்கள் ? மூன்று நிமிடப் பாடலில் முப்பது ஆண்டு வாழ்க்கையை காட்டிவிடுவது போல் விரைவாக பணம் அள்ள மசாலா கதைகளை தேர்ந்தெடுகிறார்கள் போல, இதில் பெரிதும் பாதிக்க்பட்டவர் நடிகர் விஜயை நம்பி முதல் போட்ட படத்தயாரிப்பாளர்களும், வாங்கி வெளியிட்டவர்களும் தான். மைனா, பருத்திவீரன், களவாணி கிராமத்துக்கதைகள் தான் என்றாலும் கதாநாயகியைக் கொல்லாது நல்ல முடிவை காட்டிய களவாணிப்படம் இன்னும் துணிச்சலான படம். மற்றவற்றில் சேது பாதிப்பு இருந்ததாக நினைக்கிறேன்.

****

சிங்கைப்பதிவர்களின் மணற்கேணி - 2010 போட்டி ஆக்கங்கள் பெருவதற்கான இறுதி நாள் டிசம்பர் 31 நள்ளிரவு வரை, இன்னும் நான்கே நாட்கள் இருக்கின்றன. வாய்பை தவறவிடாது பயன்படுத்திக் கொண்டு வெற்றியாளர்களுல் ஒருவராக சிங்கப்பூர் வந்து செல்லும் பரிசினை வெல்லுங்கள், கூடவே நிறைய நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவரங்கள் இங்கே

24 டிசம்பர், 2010

மன்மதன் அம்பு - அம்மணத் துறவி !

சதீலீலாவதி போன்ற முழுநீள நகைச்சுவைப் படம். படத்தின் தலைப்பு நாயகன் நாயகியின் பெயர் அதாவது மதனகோபால் என்கிற மதன் (மாதவன்), அம்பு (3ஷா). பணக்காரப் பையன் நடிகையைக் காதலித்தால் அவளை பலவாறு சந்தேகப்படுவான் என்கிற ஒருவரிக் கதையை நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார்கள். கதை, வசனம், திரைக்கதை கமலஹாசன். கிரேஷியுடன் பல்வேறு படங்களில் பணியாற்றியதன் அனுபவம் கமலஹாசனின் வசனங்களில் தெரிகிறது, கொஞ்சோண்டு வேறுபாடு நகைச்சுவையை கொஞ்சம் தத்துவமாக அவ்வப்போது சொல்கிறார்.

நடிகையைக் காதலிக்கும் மாதவன் அவளின் நடவடிக்கையை நம்பாமல் அவள் சுற்றுலா போகும் வெளிநாட்டிற்கு (பாரிஸ்- வெனிஸ்) அவளைப் பின் தொடர்ந்து கண்காணித்து தகவல் அனுப்ப ஒரு தனியார் புலனாய்வாளரை (ஸ்பை) அனுப்புகிறார். அவ்வாறு அனுப்பப்படுபவர் கமல். கமல் ஒத்துக் கொண்ட செல்லக் காராணம் நண்பருக்கு (ராமேஷ் அரவிந்த்) கேன்ஷராம், அதற்கு நிறைய பணம் தேவைப்படுவதால் இந்த ஒற்றர் வேலைக்குச் செல்கிறாராம். ஊர்வசியும், இராமேஷ் அரவிந்தின் மனைவியாக வெறும் அழுகைக் காட்சிக்காக வந்துபோகிறார். ஒற்றராகச் செல்லும் கமல் த்ரிசாவின் நடவடிக்கையில் சந்தேகப்படும் படி இல்லை என்பதை மாதவனுக்கு தெரிவிக்க, சரி திரும்ப வந்துவிடு என்று கூறி கேன்சருக்கு பணம் கொடுக்க மறுக்கிறார். மாதவன் ஏமாற்றியதால் மாதவனை ஏமாற்ற திரிஷாவைப் பற்றி புதிதாக கிசுகிசுக்க, திரும்பவும் பின் தொடர கேட்டுக் கொள்ளப்பட்டு பண உதவியும் செய்யப்படுகிறது. இதற்கிடையே மாதவன் சந்தேகப்படுவதை திரிசா அறிந்து கொள்வதாகவும், கமலுடைய மனைவி விபத்தில் இருந்ததற்கு திரிஷா முன்பு ஏற்படுத்திய விபத்து என்பதாக கதை செல்ல மாதவன் மீது இருந்த காதல் கமல் மீது மாறுகிறது திரிசாவுக்கு.......முடிவில் என்ன ஆகியது என்பதை சதிலீலாவதி, ஒளவைசண்முகி போன்று நகைச்சுவை குழப்பங்களுடன் சொல்லி இருக்கிறார்கள்.

உஷா உதுப் மாதவனின் அம்மாவாக வந்து பிராமணாள் பாஷை பேசி மாதவனும் திரிஷாவும் எப்போது பிரிவார்கள் என்று காத்திருக்கிறார். சில இடங்களில் கமலின் வசனம் மிகவும் கூர்மையாக உள்ளது. பாரிஸ் நகரத்தி ஈழத்தவர் சிலரை நடிக்க வைத்திருப்பதும், அவர்கள் பேசும் ஈழத்து தமிழும் நகைச்சுவையாக இருந்தது

திரிசாவின் சிறுவயது தோழியாக வரும் சங்கீதாவும், அவருடைய இரு குழந்தைகளாக நடிக்கும் குழந்தைகள் கலக்கி இருக்கிறார்கள். மாதவனும் சிறப்பாக செய்திருக்கிறார். திரிஷா நிறைய (விதவிதமான கவர்ச்சி) ஆடைகளில் வருகிறார். சொந்தக் குரல் போல முதலில் கொஞ்சம் கடுமையாக இருந்தது போல் தெரிந்தது பிறகு அவ்வாறு தெரியவில்லை. ஈஎம்சி ஹனிபா செயயவேண்டிய பாத்திரம் ஒன்றை வேறொரு மலையாள நடிகரை வைத்து செய்திருக்கிறார்கள். கப்பல் கப்பல் என்றெல்லாம் விளம்பரப்படுத்திய அளவுக்கு கப்பல் காட்சிகள் தனியாகத் தெரிவதாக ஒன்றும் இல்லை. நட்புக்காக துவக்கக் காட்சியில் ஆடுகிறார் சூரியா. சிங்கீதம் சீனிவாசராவ் படம் போல் இருந்தது, கே எஸ் இரவிகுமாரின் டச் என்பதாக ஒரு காட்சியும் சொல்ல முடியவில்லை (கமல் படத்தில் இயக்குனர்கள் டம்மி பீஸ் தானே)

தேவி பிராசாத் இசையமைப்பில் மூன்று பாடல்கள். ஒன்றில் பிரஞ்சுக்கார மனைவியுடன் நினைவுகளை பின்னோக்கி, காட்சிகளையும் பின்னோக்கி ஓட்டுகிறார் கமல், காட்சி புதுமையாக இருந்தது, அப்பறம் முக்கியமான ஒன்று படத்தில் நீக்கியதாகச் சொல்லப்பட்ட தொந்திக் கணபதி, நிர்வாNa துறவிகள், வரலட்சுமி ..... கமல் கவிதைப் பாடல் வெட்டாமல் ஓடியது. அதனை காட்சி படுத்திய ஒளிப்பதிவு சிறப்பு ஐந்து நிமிடம் ஓடும் காட்சியில் வெட்டே இல்லை (சிங்கிள் டேக்)

மற்றபடி இது ஒளவை சண்முகி போன்று என்றும் பார்க்கும் அளவுக்கெல்லாம் காட்சிகளுடனான நகைச்சுவையுடன் மீண்டும் பார்தால் ரசிக்குமா என்று தெரியவில்லை, என்னால் இரண்டாம் முறை பார்க்க முடியாது.

மன்மதன் அம்பு கதைன்னு எதையும் தேடமுடியாது, திரைகதை உண்டு மற்றபடி இது கூர்மையற்ற நகைச்சுவை மொக்கை, எதிர்ப்பார்ப்பு எதுவும் இல்லை என்றால் ஒருமுறை பார்க்கலாம்.

23 டிசம்பர், 2010

தமிழகத்தில் அடுத்து காங்கிரஸ் ஆட்சிதான் ?!

தமிழகத்தில் (மீண்டும்) காங்கிரசு ஆட்சி ஏற்பட வேண்டும் என்பதே காமராசருக்கு பின்னான தமிழக காங்கிரசாரின் கனவாக இருக்கிறது. உண்மையில் காங்கிரசு ஆட்சி தமிழ் நாட்டில் இருந்ததா ? என்று பார்த்தால் அது ஒரு விபத்தாக தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது என்றும் மீண்டும் தொடர்வதற்கு வாய்பில்லை என்றே தெரிகிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வம் மற்றும் வெள்ளைக்கார ஆட்சியின் பங்கு / பதவி என்பதாகத்தான் இருகுதிரைகள் சவாரி செய்து காங்கிரசு இந்தியாவில் கோலொச்சியது. தான் பிடித்து வைத்திருந்த எல்லா நாடுகளில் இருந்து வெள்ளைக்காரன் எப்படி வெளியேறினானோ அப்படித்தான் இந்தியாவிலும் வெளியேறினான். காந்தியின் அமைதிப் போராட்டத்தினால் மட்டுமே விடுதலை கைகூடியதாகிற்று என்பதாக வரலாறு எழுதி காந்தியை மகாத்மாவாக்கி, காங்கிரசின் புனித சின்னமாக்கி வெள்ளைக்காரர்களுக்குப் பிறகான இந்திய ஆட்சியை தக்கவைத்துக் கொண்டனர் காங்கிரஸ், அதுவரையில் காங்கிரஸ் தவிர்த்து எந்த ஒரு அரசியல் கட்சியும் உருவாகவோ, அல்லது உருவானவை வளர்ந்து ஆட்சியைப் பிடிக்கும் நிலையிலோ இல்லை. காந்தியை காங்கிரசின் புனித சின்னமாக ஆக்கி ஓட்டு வேட்டை நடத்துவதை காந்தியே சகித்துக் கொள்ளாமல் சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகு காங்கிரஸ் கலைக்கப்பட வேண்டும் என்றார். காந்தியை வைத்து பிழைப்பு நடத்துவோர்கள், காந்தியின் படுகொலையை அரசியல் ஆதாயமாகக் கருதி அனுதாப ஓட்டில் அரியணை ஏறினார்களே யன்றி காந்தி சொன்ன காங்கிரஸ் கலைப்பை காது கொடுத்தும் கேட்கவில்லை.

தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி இந்திய விடுதலைக்குப் பிறகு ஏற்பட்டதும் இவ்வாறே. சுமார் 20 ஆண்டுகாலம் தமிழகத்தில் இராஜாஜி, பக்தவச்சலம் மற்றும் காமராசர் மேலும் சிலர் முதலமைச்சராக இருந்துவந்தனர். அதாவது தமிழக காங்கிரஸ் ஆட்சி என்பது வெள்ளையர் விட்டுப் போனதன் நீட்சி என்பதாகத்தான் தொடர்ந்தது, மற்றபடி தமிழக நிலம் சார்ந்த நலன்களை முன்னிறுத்திய இயக்கம் என்பதாக வளர்ந்து ஆட்சியைப் பிடித்ததாக தமிழக காங்கிரஸ் குறித்து எந்த ஒரு காலத்திலும் வராலாறு எழுதிவிடமுடியாது. இந்தியத் தலைமையின் கைப்பாவை அரசு என்பதை தமிழக மக்கள் விரும்பாததும், இந்தித் திணிப்பு உள்ளிட்ட மாநில எதிரியாக செயல்பட்டுவந்து, முற்றிலும் மேல்தட்டு பண்ணையார்களுக்கு ஆதரவாக இருந்ததால் காங்கிரஸ் ஒழிப்பு என்பதை பெரியார் உள்ளிட்டோர் முன்னெடுத்து அறிஞர் அண்ணாவால் கைகூடியது. இன்றும் கூட பெரிசுகளாக இருக்கும் காங்கிரசு ஆதரவாளர்களுக்கு காங்கிரசு மேல் இருக்கும் பற்றுதலுக்குக்காரணம் காந்தி, கோகுலே உள்ளிட்டோர் துவங்கிய இயக்கம், விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடையது என்பதால் மட்டுமே. மற்றபடி தமிழக காங்கிரசு ஆட்சியில் தமிழ் நாடில் பாலாறும் தேனாறும் ஓடியது என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. காங்கிரசு ஆட்சியின் ஒரே விதிவிலக்கு காமராசர் மட்டுமே அவரும் இந்திராவால் அவமானப்படுத்தப்பட்டவர் தான். இந்தியாவில் காந்திப்படத்தை (புகைப்படம் தான்) காட்டி காங்கிரசு வாக்கு கேட்பது போல் தமிழகத்தில் காமராசரை வைத்து, காமராசர் ஆட்சி என்று பிதற்றி வருகிறார்கள். காமராசர் ஆட்சி வீழ்ந்ததற்கு திமுகவைவிட இந்திய காங்கிரசே காரணம், இந்திராவால் அவமானப்படுத்தப்பட்ட காமராசரை மீண்டும் ஆட்சியில் அமர்த்த காங்கிரசாரே எந்த ஒரு முயற்சியும் பெரிதாக எடுக்காமல், காமராசரின் மதிய உணவு திட்டம் மட்டுமே காப்பாற்றிவிடும் என்று நினைக்க, காமராசர் விருது நகரிலேயே தோற்றுப் போக, அதற்காக அண்ணா உள்ளிட்டோர் எதிர்கட்சி என்றாலும் மிகவும் வருந்தினர், இது வரலாறு.

தமிழகத்தில் மீண்டும் காங்கிரசு ஆட்சி அமைக்க ஏதேனும் வாய்ப்புள்ளதா ? மூன்றாவது அணி அமைத்து ஆட்சியைப் பிடிக்கலாம் என்று கனவு காணுகின்றனர் சிதம்பரம் உள்ளிட்டோர். தமிழகத்தில் காங்கிரசு ஆட்சிக்கு அவர்கள் என்றாவது தமிழர் நலன் சார்ந்து, தமிழர்களின் பிரச்சனையை முன்வைத்து செயல்பட்டு வந்திருக்க வேண்டும், அண்டை மாநிலத்தில் காங்கிரசு ஆட்சியில் இருந்த போது கூட தமிழக தண்ணீர் தேவைக்கு நிரந்தரத் தீர்வுக்கான முயற்சியை எடுக்கவில்லை, அன்றாடம் கொல்லப்படும் மீனவன் குறித்து காங்கிரசு அக்கரைப்பட்டுக் கொள்ளவோ, கவலை கொள்ளவோ இல்லை, எல்லாவற்றிற்கும் மேலாக சப்பைக் கட்டாக ஈவிகேஸ் இளங்கோவன் போன்றோர், இந்திய இராணுவம் இலங்கை மீனவனை சுடுது, அவங்க தமிழக மீனவனை சுடுகிறார்கள், யானைக்கும் பானைக்கும் சரி என்பது போல் வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.

ஆசை இருக்கு யானை ஏற......எம்பி ஏற தெம்பு வேண்டாமா ? என்று கிராமத்தில் பழமோழி சொல்லுவார்கள், காங்கிரசின் ஈழ நலன் புறக்கணிப்பை கருத்தில் கொள்ளாவிடினும், காங்கிரசார் என்றுமே தமிழக நலனை முன்னிறுத்தி எந்த ஒரு செயல்திட்டத்தையும் நிறைவேற்ற இருக்கவில்லை,. மத்திய அரசின் மாநிலங்களில் செயல்படுத்துவதெல்லாம் பிள்ளையார் கோவில் சுண்டல் போல் எல்லோருக்கும் கிடைப்பது போல் தமிழகத்திற்கும் கிடைக்கிறது, இதை பாஜக உள்ளிட்ட பிற மத்திய அரசுகளும் செய்தே வந்திருக்கின்றன. காங்கிரசைப் பொருத்த அளவில் மாநில அரசியல் என்பது மத்திய அரசை பலப்படுத்திக் கொள்ள ஒரு கறிவேப்பிள்ளை. அதற்கு இடம் கொடுக்க தமிழகத்துக்கு தமிழன் ஒன்றும் இளித்த வாயன்கள் இல்லை. இதோ நேற்று இராகுல் காந்திப் சொல்கிறார் அடுத்த முதல்வர் (திமுவுடன் கூட்டணி முறியாத நிலையில் அடுத்து நாங்கள் தான் முதல்வர் என்று பேசும் அரசியல் நாகரீக கோமான்) இளைஞர் காங்கிரசை சேர்ந்த ஒருவர் தானாம்.

ஐயோடா சாமி, நேருவிடம் பாடம் கற்று அரசியலில் பழுத்த இந்திராவும், அவரைப் பார்த்து வளர்ந்த இராஜிவ் காந்தியும் தமிழக அரசியலில் செய்யாத தகிடுததங்களையும், மிசா உள்ளிட்டவற்றை நடத்திக் காட்டியும் அவர்களே போடாத குட்டிக்கரணங்களைப் போட்டு இந்திராவின் பேரன் தமிழக முதல்வரை காங்கிரசுக்குத் தருவராம்.

ஆடுறா ராமா ஆடு.......போடுறா கரணம் போடுறா ராமா போடு !

22 டிசம்பர், 2010

பைவ் ஸ்டார் சமையல் !

தேவையான பொருட்கள் : சின்ன வங்காயம் ஒரு கிலோ, சிறிய எலுமிச்சை அளவுக்கு புளி, பழுத்த தக்காளி இரண்டு, தாளிக்க கருவடம் அல்லது வெந்தயம் சிட்டிகை அளவுக்கு. நல்ல எண்ணை இரண்டு தேக்கரணடி, கறிவேப்பிள்ளை சிறிது, கொழம்புப் பொடி அரை மேசைக்கரண்டி, ஒரு கீற்று தேங்காய், பூண்டு பற்கள் பத்து, தேவையான அளவு உப்பு

சிறிய வெங்காயத்தை ஐந்து நிமிடம் வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறவைக்கவும், கூறிய நகத்தினாலோ அல்லது பேனா கத்தியாலோ ஊறவைத்த வெங்காயத்தை உரிப்பது எளிது, கண்களில் எரிச்சலும் வராது, அதில் ஐந்து முதல் பத்து வெங்காயங்களை எடுத்து குறுக்குவாட்டில் சிறிது சிறுதாக நறுக்கிக் கொள்ளவும், தக்காளியை சிறிய துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

புளியையும் தேவையான அளவுக்கு வெது வெதுப்பான தண்ணீரில் ஊறவைக்கவும், விரைவில் எளிதில் கரைய வெதுவெதுப்பான தண்ணீரைப் பயன்படுத்தலாம், புளியைக் கரைத்து, திப்பிகளை நீக்கி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்

தேங்காயையும், கொழம்புபொடியையும் சிறுதி நீர் சேர்த்து (மைபதம் வருவதற்கு சற்று முன்பாக) அரைத்து வைத்துக் கொள்ளவும்

அடுப்பில், மிதமான சூட்டில் குழம்பு சட்டியை (மண்பாண்டம் சிறப்பு) வைத்து சூடு ஏறியதும், நல்லெண்ணைய ஊற்றி காய்ந்ததும் வெந்தயத்தைப் போட்டு சிவந்ததும், வெட்டி வைத்த வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும், சிவந்ததும், மீதம் இருக்கும் உறித்த வெங்காயங்கள், பூண்டு பற்கள் அனைத்தையும் போட்டு ஐந்து நிமிடம் வதக்கவும், பிறகு புளி நீரை ஊற்றி, தேவையான அளவு உப்பைப் போட்டு, தக்காளி துண்டுகளைப் போட்டு ஒரு கொதி வரும் வரை மூடி வைக்கவும்.

பிறகு தேங்காய் - கொழம்புப் பொடி சாந்தை கொதிக்கும் குழம்பில் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும், பிறகு தீயைக்குறைத்து ஒரு பத்து நிமிடம் வைக்க குழம்பு சுண்டிய பக்குவதில் சுவையாக இருக்கும், இறக்கும் சற்று முன்பாக கறிவேப்பிள்ளையைப் போட்டு இறக்கவும். இந்தக் குழம்பில் முருங்கைக் காய் அல்லது உருளை கிழங்கு சேர்க்க அவைகள் இன்னும் சுவையாகவும் தொட்டுக் கொள்ளவும் பயனாக இருக்கும்.

பொறித்த அப்பளம், கூழ்வடகம் இந்தக் குழம்புடன் தொட்டுக் கொள்ளச் சுவையாக இருக்கும், இந்தக் குழம்பை பாசுமதி பச்சை அரிசி சாதத்துடன் சாப்பிட இன்னும் சுவையான உணவாக இருக்கும்




இந்தக் குழம்பின் பெயர் வெங்காயக் குழம்பு. வெங்காயம் கிலோ 80 - 100 ரூபாய் விற்கும் போது இது பைவ் ஸ்டார் சமையல்.....காஸ்ட்லியான குழம்பு தானே. :)

பின்குறிப்பு : எழுதி இருப்பவை செயல்முறை குழம்பு (ஒரிஜினல் ரிசிப்பி) தான் சமைச்சுப் பாருங்க

21 டிசம்பர், 2010

தங்கமணி இல்லை என்றால்... (சிறுகதை) !

மனைவி ஊருக்குச் சென்றதை அவள் வந்து சேர்ந்ததாக உறுதிபடுத்தியபிறகு தங்கமணி டயலாக்கை சத்தமாகச் சொல்லிவிட்டு நண்பர்கள் ஒவ்வொருவராக அழைத்தான் குமார்

'இல்லை மச்சி......இன்னிக்கு மதியம் ஒரு வேலை இருக்கு......வேண்டுமென்றால் ஒண்ணு செய் மாலை 5 மணிக்கு நேராக என் வீட்டுக்கு வந்திடு......என் வீட்டிலும் நோ தங்கமணி' எடுத்த எடுப்பில் இராகவன் இவ்வாறு சொன்னதால் ஐந்து மணி வரை தனிமையில் ஓட்டியாகனுமேன்னு சற்று ஏமாற்றமாகவே இருந்தது, இருந்தாலும் ஐந்து மணிக்கு இராகவன் வீட்டில் குமார் ஆஜர்

கண்ணாடி போல் துடைத்து வைக்கப்பட்ட தூய்மையாக இருந்தது இராகவன் வீடு,

'என்ன இராகவா..பொண்டாட்டி ஊருக்குப் போய் வாரம் ஆச்சுன்னு சொன்னே....வீடெல்லாம் பளீர்னு இருக்கு.......தற்காலிக பேச்சிலர் வீடு போலவே தெரியலையே.'

'போடா டேய்........நான் ஆண் ஆதிக்கவாதி இல்லை, பொண்டாட்டி தான் எல்லாத்தையும் செய்யனுமா.....நாம செய்துவிடக் கூடாதா ?'

இராகவன் ஒரு முற்போக்குவாதி, ஆணாதிக்கம் / பெண்ணாதிக்கம் பற்றி வகுப்பெடுப்பவன், வீட்டில் துணிகாயவைப்பது, வீட்டைப் பெருக்குவது, பாத்திரம் கழுவது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வானாம், இத்தனைக்கும் அவன் மனைவி வேலைக்குச் செல்லாமல் வீட்டு வேலைகளை கவனித்து வருபவர் தான்.

'உன்னைய மாதிரி இல்லை இராகவன்.....என்னைக்காவது குப்பையில் தடுமாறி விழுந்துட்டா மட்டும் வீட்டை பெறுக்குவேன்.....இல்லாட்டி வீடு அப்படியே தான் இருக்கும்..... என்று குமார் சொல்ல'

'தெரியுமே....படுத்த படுக்கையைக் கூட சுருட்டி வைக்காமல்........நாளைக்கும் அதை திரும்பப் போட வேண்டி இருக்கும், இரண்டு வேலைன்னு அப்படியே போட்டு வைத்திருப்பவன் தானே நீ' - இராகவன்

'அதுல ஒண்ணும் தப்பாகத் தெரியல.....படுக்கை அப்படியே கிடந்தால் அதுக்கும் கீழ் தூசி அடையாது' என்கிற குமாரின் லாஜிக் 'சகிக்கவில்லை.....தினமும் குளிப்பியா அதுவும் இல்லையா ?' என்றான் இராகவன்

'அவனவன் கஷ்டம் அவனவனுக்கு.......'

'போடா என் திருப்திக்கு இல்லாவிட்டாலும்.........வீட்டை சுத்தமாக வைச்சிருந்தா எம் பொண்டாட்டி எப்படி மகிழ்வாங்க தெரியுமா ?'

'மச்சி ஆணியம் / பெண்ணியம் பேசுகிறியே தவிர ஒனக்கு பெண்களோட லாஜிக் / செண்டிமெண்ட் சுத்தமாக தெரியல.....'

'எத வச்சிடா அப்படிச் சொல்றே......'

'நான் இல்லை என்றால் வீட்டில எந்த வேலையும் நடக்காதுன்னு மனைவி நினைக்கனும்.......தன்னோட முக்கியத்துவம் தன் வீட்டில் தேவைன்னு நினைக்கிறதில் தான் பெண்களோட மனநிறைவே அடங்கி இருக்கு......'

'பிறகு........?'

'நீ பாட்டுக்கு ஆள் இல்லாத போதும்......வீட்டை ஒழுங்காக வைத்திருந்தால்......தன்னைப் பற்றிய நினைப்பே இவருக்கு வந்திருக்காது போலன்னு நினைப்பாங்க'

'அப்படியா சொல்றே......'

'ஆமாண்டா....என் புருசனுக்கு....நான் இல்லைன்னா சோறு போட்டுக் கூடத் திங்கத் தெரியாதுன்னு என் மனைவி அவங்க வீட்டில் பெருமையாகப் பேசிக்கொள்வாளாம்....நான் இல்லாட்டி தவிச்சிப் போய்டுவார்னு அடிக்கடி சொல்லுவளாம்'

'அடப்பாவி எனக்கு இதெல்லாம் தெரியாதே.........நான் ஆணும் பெண்ணும் சமம்.....வீட்டை சுத்தமாக வைத்திருப்பதில் நமக்கும் பங்கிருக்குன்னு நினைச்சேன்......இருந்தாலும் ஏமாத்துறோம்னு உறுத்தல் இருக்காதா ?'

'மண்ணாங்கட்டி....இதுல யாருக்கும் பாதிப்பே இல்லை....மறைமுகமாக அவங்களோட தேவை நமக்கு எப்போதும் இருக்கனும்னு உணர்த்துவது தான் இது'

'அப்படிங்கிறே.........?'

'தன்னோட இருப்பு அங்கு தேவை இல்லை........நான் இல்லாவிட்டாலும் குடிமுழுகிடாதுங்கிற நினைப்பு ஒரு பெண்ணுக்கு மன அளவில் பலவீனத்தை உண்டு பண்ணும்.......சில விசயத்தில சமத்துவம் சம உரிமைன்னு இருந்தாலும் அதைத் தாண்டிய செண்டிமெண்டுகளுக்குத்தான் மதிப்பு....'

'நீ சொல்றதும் சரிதான்ன்னு தோணுது'

'சந்தேமாக இருந்தால்........நாளைக்கு மனைவிக்கு போன் செய்யும் போது......நீ இல்லாத வீடு நிலவில்லாத வானம் போல் இருண்டு கிடக்குதுன்னு டயலாக் விட்டுப் பாரு'


*****

மறுநாள் இராகவன் அலைபேசியில் அழைத்துச் சொன்னான்.

'குமார், நீ சொன்னது உண்மை தான்....'

'பொறுத்துக் கொள்ளுங்கள், சமாளித்துக் கொளுங்கள்....நேரத்துக்கு சாப்பிடுங்கள், சரியாத் தூங்குகள்.....என்றெல்லாம் சொன்னாள், அதில் வழக்கத்துக்கு மாறான வெறும் விசாரிப்புகள் இன்றி கொஞ்சம் சிணுங்கள், கொஞ்சம் ரொமான்ஸ் இருந்தது'

'சரிடா அதுக்குண்ணு ஓவராக சீன் போடாதே ...கஷ்டப்படுறேன்னு நினைச்சுட்டு சட்டுபுட்டுன்னு கிளம்பி வந்து நிக்கப் போறாங்க...அப்பறம் அடுத்த சனி /ஞாயிறு அன்பு வீட்டில பேச்சிலர் பார்டியை மிஸ் பண்ணிட வேண்டியது தான்'

20 டிசம்பர், 2010

ஆதீனமும் ஆசனவாய் சாதியும் !

இன்றைய தேதிக்கு சாதிப் பெயரில் பெருமை ஒன்றும் இல்லை, சாதி வெளியே சொன்னால் காரித் துப்பும் நிலைதான். இந்திய சாதி அமைப்பின் அடிப்படைத் தவறு சாதிகளில் ஏற்றத் தாழ்வு, இந்திய சாதி அமைப்பு முறை வீழ்ச்சி அடையவும், பிற நாடுகளின் இது போன்ற அமைப்பைப் பின்பற்ற முடியாமல் போனதற்கும் இதுவே காரணம். தொழிற் பெயராக உருவாகிய சாதி, அந்தந்த குறிப்பிட்ட சாதிக் கென வேலைகளை வைத்து அந்த வேலையைச் செய்த மக்கள் குறிப்பிட்ட சாதி என்று அழைக்கப்பட்டு வந்தனர். தொழில்களில் ஏற்றத்தாழ்வு இல்லாத நிலையில் சாதி அமைப்புகள் வெற்றிகரமாக இயங்கி வந்திருக்கின்றன. எனக்கு தெரிந்த வகையில் 1330 திருக்குறளில் சாதி அமைப்பைக் கண்டிக்கும் திருக்குறள் இல்லை. பின்னர் வந்த அவ்வையார் பாடல்களில் 'சாதி இரண்டொழிய வேறில்லை' என்ற சொற்றொடர்கள் ஏற்பட்டிருக்கின்றன. வள்ளுவருக்கு பின்னான காலகட்டங்களில் குறிப்பிட்ட தொழில்களை இழிவாகக் கருதும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இன்றும் கூட குற்றவாளிகளுக்கான தண்டனை என்பதாக இழி தொழில்கள் செய்விக்கப்படுகின்றன. மேற்கண்ட குறிப்பிட்ட காலத்தில் சமூகக் குற்றங்களைப் புரிந்தவர்களை ஒதுக்கி வைத்து அவர்களுக்கென்றே சில தொழில்களை தண்டனையாகக் கொடுத்து, பின்னர் அவர்களுடைய வாரிசுகளையும் அவ்வாறே இழிதொழில்களை செய்யப் பணித்திருக்க வேண்டும். அல்லது போரில் பிடிக்கப்பட்டவர்களை இழிதொழில் செய்யப் பணித்திருக்க வேண்டும். நாளடைவில் அந்தத் தொழில்களை செய்வோரை இழிவாகக் கருதும் வழக்கம் ஏற்பட்டிருக்க, அவ்வாறு செய்யலாகாது என ஒளவையார் உள்ளிட்டோர் கண்டிததற்கான சுட்டிகளே 'சாதி இரண்டொழிய வேறில்லை' என்னும் மூதுரை. சாதி அமைப்புகள் உயர்வு தாழ்வு பார்க்கத் துவங்கிய காலங்களிலேயே தமிழ்நாட்டில் அவை வன்மையாகக் கண்டிப்பட்டுள்ளது. இருந்தாலும் ஆண்டைகளும், ஆள்வோர்களும் வல்லவன் வகுத்ததே சட்டம் என்கிற கோட்பாட்டில் சாதி வேறுபாடுகள் தொடர்ந்த வண்ணமே இருந்தன.

இன்றைய தேதியில் சாதி அமைப்பின் பயன்பாடுகளாக குலதெய்வ வழிபாடு மற்றும் பெண் கொடுத்து / எடுப்பது, மற்றும் ஒரு சில குலம் சார்ந்த பண்டிகைகள் விழாக்கள் மட்டுமே. மற்றபடி சாதிப் பெருமை பேசுபவர்கள் எவரும் செருப்படி வாங்கக் கூடிய தகுதி உடையவர்கள் தான். திருமண உறவுகளை ஏற்படுத்தி அதன் மூலம் வாரிசுகளைத் தரும் உத்தியில் அமைக்கப்பட்டு இருப்பதால் சாதிகள் பிறப்பின் வழியாகப் பிண்ணப்பட்டுள்ளது, எனவே அதனை ஒரு சில நூற்றாண்டுகளில் அழிப்பதும் கடினம் தான். இருந்தாலும் சாதிப் பெருமை என்பதும்,. வெளிப்படையாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டாமே என்பதால் தமிழ் நாட்டில் 99 விழுக்காட்டினர் பெயருக்குப் பின்னால் சாதி அடையாளப்படுத்திக் கொள்வதை பெரியாரின் அறிவுறுத்தலுக்கு பிறகு ஒருவாரு ஏற்றுக் கொண்டு தவிர்த்துள்ளனர். ஒரு சிலர் தவிர்த்து சாதி வெளியே தெரிவது அவமானம் என்றே நினைக்கின்றனர். இத்தகைய அவமானம் பார்ப்பனருக்கும் பறையருக்கும் ஒன்றே என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. கொண்டைப் பார்டி, பூணூல் பார்டி என்று சொல்லிவிடுவார்கள் என்பதற்காக பார்பனர்கள் சாதிப் பெயரை வெளியே சொல்லிக் கொள்வதில்லை, பறையர் சமூகப் பொருளாதார நிலை இன்னும் தாழ்வாக இருப்பதால் அவர்களும் சாதியை தங்களாக வெளிப்படுத்திக் கொள்வதில்லை. அரசியல் ஆதாயம் உடையவர்கள் மட்டுமே தாம் இன்னின்ன சாதி என்றும், குறிப்பிட்ட சில சாதிகளை மேலே கொண்டு வந்து சாதி சமூக பொருளாதாரத்தை முன்னேற்றவேண்டும் என்பதற்காக சாதிப் பெயரில் கட்சிகளை, சங்கங்களை அமைத்திருக்கிறார்கள். மற்றபடி இந்த சாதி சங்களை வைத்து பிற சாதி தனிமனிதனை கீழாகக் கொள்ள எந்த ஒரு முகாந்தரமும் இல்லை, அப்படி செய்யும் இடங்களில் சாதிக்கலவரங்களே வெடிக்கின்றன. இன்றைய தேதிக்கு சாதி என்பது குறிப்பிட்ட தெருவோடு அல்லது வீட்டோடு முடிந்துவிடுகிறது. சாதி சார்பில் நெருக்கமானோம் என்கிற நிலை நட்புகளுக்குள்ளேயும் மிகக் குறைவு.

குறிப்பிட்ட தாழ்த்தப்பட்ட சாதி சமூகங்கள் தவிர்த்து பிறர் சாதி அமைப்பாகத் தொடர்வதற்குத் தேவையான காரணங்கள் மிகக் குறைவு. காரணம் குலம் சார்ந்த தொழில் என்று எதுவும் தற்போது இல்லை. முடித்திருத்தகங்கள், ப்யூட்டி பார்லர் என்பதாக பெயரை மாற்றி பார்பனர் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினர் நடத்துகின்றனர். எனக்கு தெரிந்து கொத்தனார் சித்தாள் வேலையை செய்யாத சாதியினரே கிடையாது. கொத்தனார் - சித்தாள் தொழில் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் தொழில் என்பதாக இல்லை. அது போன்று தச்சு வேலை, பர்னிசர் ஷோரூம் இவை எதுவும் குறிப்பிட்ட சாதியினரால் மட்டுமே நடத்தப்படுவதில்லை. நகைசெய்யும் தொழில்கள் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சாதியினரால் தொடர்ந்து நடைபெறுகிறது, ஆனாலும் நகைக்கடைகள் எந்த ஒரு குறிப்பிட்ட சமுகத்தினரின் தொழிலாக இல்லை. துவக்கத்தில் உணவகத் தொழில் கொடிகட்டிப் பறந்த பார்பனர்கள், பின்னர் நாடார் சமூகத்தினரால் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். நாடார் சமூகத்தினர் செய்யாத தொழிலே இல்லை.

பாலியல் தொழில் உட்பட பணம் கொழிக்கும் தொழில்களை அனைத்து சமூகத்தினரும் செய்து வருகின்றனர். சாதி என்பது தற்போதைய சூழலில் குறிப்பிட்ட தொழிலைச் சார்ந்திருக்கவில்லை என்னும் போது தற்போதும் சாதி அமைப்பு தொடர்வதற்கு பெண் கொடுத்து எடுப்பது என்பது தவிர்த்து, குறிப்பிட்ட குலதெய்வ வழபாடுகள் என்பதாகச் சுருங்கிவிட்டன. இந்த சூழலில் ஒருவர் சாதிப் பெயரை பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்வதற்கான தேவை என்ன ?

சாதி ஏன் தொடர வேண்டும் என்று ஒரு சாக்கடை சாமியார் சொல்கிறான், குறிப்பிட்ட சாதிப் பெயர்களைக் கூட்டினால் எண் 9 வருகிறதாம்,

"முதலியார் மற்றும் பிள்ளைமார்கள் உட்பட 153 ஜாதியையும் கூட்டினால் ஒன்பது வருகிறது. இது, மனித உடலில் அமைந்த ஒன்பது ஓட்டைகளை சுட்டுவதாகும். இந்த ஓட்டைகள் மனிதன் வாழ்வதற்கான அனைத்து வேலைகளுக்கும் காரணமாக அமைகிறது. அதுபோல இவர்கள் சமுதாயத்திற்கு முக்கியமானவர்கள்" - மதுரை ஆதினம்

இந்த ஒன்பது ஓட்டைகளில் ஆசனவாய் சாதி எது ? அது தானே முக்கியமான சாதி, காலில் இருந்து பிறந்தவன் என்று கற்பித்து ஒதுக்கிவைக்கப்பட்ட இந்திய சாதி அமைப்புச் சூழலில், ஆதீனம் குறிப்பிடும் ஒன்பது ஓட்டைக்குள் ஒன்றாக ஆசனவாய் சாதி இதுதான் என்று அடையாளப்படுத்தினால் களேபரம் ஆகாதா ? அந்த மூட்டாள் பய ஆதினம் ஒன்பது ஓட்டைகளில் ஆசனவாய் சாதி எது என்று தெளிவு படுத்துவானா ? ஆதீனமாம்...... ஆதீனம் நல்லா வருது வாயில.

தொடர்புடைய சுட்டி.

17 டிசம்பர், 2010

மெயயெழுதது இலலாமல படிகக முடியும !

ஆஙகிலததில எழுததுகள இடம மாறி இருநதாலும பழககப படட சொறகள எனபதால எளிதில படிதது விடலாம. தமிழிலும அதுபோனறு படிகக முடியும, காரணம ரொமப எளிமையானது, பொதுவாக எழுததுக கூடடி படிககும வழககம பளளி பருவததுடன முடிநதுவிடும, பிறகு பததிகளை சொறகளாகததான படிககிறோம மூளையில புழஙகிய சொறகளின பதிவு இருபபதால சொறகளில எழுததுகள இடம மாறி இருநதாலும படிபபது எளிது தான. தமிழில மறறொரு சிறபபு மெயயெழுததுகள அதாவது தலையில புளளி வைதத எழுததுகளே இலலை எனறாலும சொறறொடரை விரைவாகப படிகக முடியும.

எனககு வழககமாக வரும ஒரு தமிழ பிடிஎஃப கோபபை திறநத போது பிடிஎஃப ரீடர குறைபாடடினால அதில இருநத மெயயெழுததுகள அனைததிலும புளளியைக காணவிலலை. இருநதாலும எனனால எளிதாக படிகக முடிநதது, இததனைககும அநத கோபபில நானகு பககஙகளுககு மேல இருநத அனைததையும பொதுவாகப படிககும அதே நேரததில படிதது முடிததேன. இநதியாவின எநத மொழிகளிலும இவை சாததியம அறறது. ஏனெனில வடடெழுததில இருககும, கனனடம, தெலுஙகு, மலையாளம உடபட மறறும தேவநகரி வடிவில எழுதபபடும இநதி உடபடட வடமொழிகள மெயயெழுததுககு அடுதத உயிரமெயயெழுததைச சேரதது ஒரே எழுததாக எழுதும வழககம அவரகளுடையது, பழநதமிழில கையெழுததும, ஓலைசுவடிகளும அவவாறு எழுதும வழககம தமிழிலும இருநதது. பிறகு தமிழ அசசெழுததுககு மாறிய போது, மெய மறறும உயிரமெயயை தனித தனியாகவே எழுதிவநதுளளனர நமமவரகள.

சொறகள அனைததும தமிழாக இருநதால மெயயெழுதது இலலாமல படிககலாம. ஆஙகிலச சொறகளை அபபடியே தமிழில இவவாறு எழுதினால படிகக முடிவது கடினம. மேலே பிடிஎப (PDF) - இதைப பலர பி...டி ...எஃப.....ரீ...ட...ர எனறே படிததிருபபாரகள, ஏனெனில அநத சொல தமிழ இலலை

மெயயெழதது இலலாமல வாசிகக முடிவது தமிழ எழுததுகளின மறறொரு சிறபபு.

16 டிசம்பர், 2010

திமுகவை காவு கொடுக்கும் காங்கிரஸ் !

கொள்கை முரண் உள்ள கட்சிகள் கூட்டணி சேர்ந்தால் அரசியல் ஆதாயத்திற்கு மட்டுமே சேரும், அதில் லாப நட்ட வேறுபாடுகள் இருந்தால் அடித்துக் கொண்டு தெருவில் நிற்பார்கள் என்பதற்கு கூட்டணி ஆட்சிகள் சாட்சியாக இருகின்றன, இந்தியாவில் மாநிலங்களில் ஏற்படும் கூட்டணிகள் என்றாலும் சரி, நடுவண் அரசு கூட்டணியாக இருந்தாலும் சரி, பழைய பாஜக கூட்டணி மற்றும் அண்டை மாநில குமாரசாமி கூட்டணி தற்போதைக்கு காங்கிரசு கூட்டணி இவைகளிடையேயான விரிசல்கள் இப்படித்தான். அரசியல்களம் என்பது சேவை மையம் என்பதை மறந்து அதிகாரத்தைக் / பதவி வசதிகளைக் கைப்பற்றும் போட்டித்தளம் என்பதாக மாறிப் போனது மக்களாட்சியின் கேலிக் கூத்துகளாக மாறிப் போய் உள்ளன.

*****

இந்தியாவில் செல்வாக்கு இழந்த காங்கிரஸ் கூட்டணி உத்திக்குள் நுழைந்தற்குக்காரணமும் நேரு குடும்பத்தின் அதிகாரம் தொடரவேண்டும் என்பதற்குத்தான். இதனால் இராஜிவ் கொலைக்குப் பழிக்கு பழிவாங்க முடியும் மற்றும் போஃபர்ஸ் உள்ளிட்ட ஊழல்களில் இருந்து காப்பாற்றிக் கொள்ளமுடியும் என்பதுடன் மாநில அளவில் செயல்படும் பண்ணையார்களின் செல்வாக்குகளை பழையபடி உயர்த்திக் கொள்ள முடியும் என்பதனால் தான். மாநில அளவிலான கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் பதவி ஆசைகாட்டுவதன் மூலம் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று காங்கிரஸ் சாதித்துக் கொண்டுள்ளது.

மாநிலங்களில் கொள்ளையடிப்பது போதாது கொள்ளைத் திட்டம் இந்தியா அளவுக்கு விரிவு படுத்துவதன் மூலம் தாம் தொடர்புடைய / தொடங்கியுள்ள இந்தியா தழுவிய நிறுவனங்களைக் காப்பாற்றி வளர்க்க முடியும் என்கிற பேராசையும் மாநில கட்சிகள் பலியாகிவிடுகின்றன, என்பதற்கு தற்போது திமுக சந்திக்கும் சிக்கல் கண்கூடு. திமுகவுடன் ஆதரவுடன் ஈழப் போராட்டதை நசக்க இலங்கைக்கு ஆதரவு கொடுத்த காங்கிரஸ், துவக்கத்தில் திமுவின் ஸ்பெக்டரம் தொடர்பில் நடைபெற்றவற்றைக் கண்டு கொள்ளாமல் தான் இருந்துவந்திருக்கிறது. பேசிய பேரம் படியவில்லை என்பதால் இன்றைக்கு 1.75 லட்சம் கோடிக்கான ஊழல் வெளியே வந்திருக்கிறது என்று கருதவேண்டியுள்ளது. தனக்கும் கீழ் பணிபுரியும் அமைச்சரின் செயல்பாடுகள் தனக்குத் தெரியவில்லை என்றும், தன் சொல்வதை தன்னுடைய அமைச்சர் கேட்கவில்லை என்பதையும் ஒரு பிரதமரால் கூசாமல் சொல்லமுடிகிறது. பிரதமர் என்பவர் அமைச்சரின் செயல்பாடுகளை அனுமதிப்பவர், சரி இல்லை என்றால் அமைச்சரையே மாற்றிவிடுபவர் என்பது தானே நடைமுறை. திமுக - காங்கிரசு கூட்டணி ஆட்சியில் அமைச்சகங்கள் என்பவை ஒற்றைத் தலைமையில் கட்டுப்படுத்த முடியாதவை அல்லது அவ்வாறு செய்து கொண்ட ஒப்பந்தம் அதாவது என் எல்லைக் கோட்டிக்குள் நீ வராதே என்று சொல்வதைப் போன்ற ஒப்பந்தம் என்பதாக இருந்தால் மட்டுமே ராசா தன்னிச்சையாகச் செயல்பட்டார் என்றே சொல்லமுடியும்.

ராசாவை தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று பிரதமர் ஒப்புதல் கொடுத்திருக்கிறார். அந்த ஒரு சூழலில் ராசாவின் நடவடிக்கைகள் திட்டமிட்டே பதிவு செய்யப்பட்டுள்ளது. நாளிதழ் தகவல்களாக வந்தவற்றில் நீரா ராடியா ராசா, கனிமொழி மற்றும் இராசாத்தி அம்மாளுடன் பேசியவை என்கிற உரையாடல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் நீரா ராடியா இவர்களுக்காக காங்கிரசின் எந்த தலைவர்களுடன் என்னப் பேசினார் என்பதை இதுவரை அமலாக்கப் பிரிவினரோ, சிபிஐயோ வெளி இடவில்லை, இவர்கள் அல்லாது டாடாவுடன் பேசியவை வெளியாகி உள்ளன. அவையும் டாடாவுக்கும் மாறன் சகோதர்களுக்கும் இடையேயான கசப்புகளைச் சொல்வதை அன்றி டாவின் காங்கிரசு தொடர்புகள் எதையும் வெளி இடவில்லை. டாடாவின் இந்த பேச்சுகளை வெளி இடுவதால் டாடாவுக்கும் காங்கிரசுக்கும் எந்த ஒரு சிக்கலும் ஏற்படவில்லை, டாடா - மாறன் நேரடிப் (தொழில்) போட்டி என்பதாக மட்டுமே அந்தப் பேச்சுகள் சொல்லுகின்றன. இதுவும் திமுவிற்குள் இருக்கும் உள்கட்சிப் பூசல்களை எடுத்துச் சொல்லும் ஒரு பேச்சு அதில் பண பேரம் இவை திமுகவிற்கு மேலும் தலைகுணிவு ஏற்படுத்தும் என்கிற நோக்கத்தில் வெளி இடப்பட்டிருக்கின்றன.

நோக்கம் தான் என்ன ? ஸ்பெக்டரம் விவாகரத்தை எதிர்கட்சிகள் கண்டுபிடித்ததா ? எதிர்கட்சிகள் தன்னிச்சையாக கண்டு பிடித்திருந்தால் அதற்கு முன்கூட்டியே நீரா ராடியாவின் பேச்சுகள் பதிவு செய்யப்பட்டிருக்காது. ஸ்பெக்டரம் விவகாரத்தில் புழங்கிய கோடிகளுக்கு குறிப்பிட்ட அளவு பங்கு போய் சேர்ந்திருக்காது, வெளியான பேச்சுகள் எதிலும் ஸ்பெக்டரம் தொடர்பான உரையாடல்கள் எதுவும் இல்லை, அவை எல்லாம் அமைச்சர் பதவியின் பேரங்கள் மட்டுமே. நடந்த அமலாக்கப்பிரிவு மற்றும் வருமானவரி சோதனைகள் முதலில் இராசாவின் உறவினர்கள், அலுவலகங்கள் என்பதாகவும், தற்போது நக்கீரன் இணையாசிரியர் காமராஜ் உள்ளிட்ட திமுகவிற்கு நெருக்கமானவர்களிடம் மட்டுமே (இதுபற்றி நக்கீரன் பெட்டிச் செய்தி கூட வெளி இடவில்லை, ரொம்ப நடுநிலை, இன்னொரு முரசொலி). இவ்வளவு தொடர்புடைய இராசாவிற்கு நெருக்கமான காங்கிரசார் யாருமே இல்லையா ? ஏன் அவர்களிடம் சோதனைகள் எதுவும் நடைபெறவில்லை, ஏன் இராசவின் ஸ்பெக்டரம் தொடர்பான உரையாடல்கள் வெளியிடப்படவில்லை ? என்று நினைக்கும் போது, காங்கிரஸ் திமுகவை பலமிழக்கச் செய்ய அனைத்து வல்லமைகளையும் உத்திகளையும் பயன்படுத்துகிறது என்பது தெளிவாகிறது. நமக்குத் தெரிந்த ஊகங்கள் திமுக தலைவர் கருணாநிதிக்குத் தெரியாதா ? இருந்தும் கூட்டணியை உதராமல் இருப்பது ஏன் ? ராசாவின் ஊழல்கள் ஏறக்குறைய நிருபணம் செய்யக் கூடியச் சூழலில் இருப்பதாலும், காங்கிரசிடம் பேசிய பேரங்களை செயல்படுத்ததாலும் ஊமைக்கண்ட கனவாக சிக்கித் தவிக்கிறார். காங்கிரசிற்கும் மடியில் கனமில்லை என்றால் கூட்டுக் குழு விசாரணைக்கு ஒப்புக் கொண்டு பாராளுமன்ற கூட்டத்தொடரை நடத்தி இருக்கலாமே. எனவே ஸ்பெக்டரம் விவகாரத்தில் திமுகமீதான காங்கிரசின் நெருக்குதல் பங்குகளின் விழுக்காட்டில் ஏற்பட்ட எரிச்சலே ஆகும்.

காங்கிரசை ஒழிக்க உருவான திமுக, கொள்கைகளை மறந்து வாரிசுகளின் பேராசைக்கும், பதவி சுகத்திற்கும் அடிமையாகி அதே காங்கிரசின் 'கை'களினால் அழிகிறது. குட்டியை விட்டு ஆழம்பார்பதாக இளங்கோவனின் திமுக சாடல்கள் அதை நிருபணம் செய்வதாக இருக்கின்றன. தமிழ் மண்ணில் திமுக இருக்குமா இருக்காதா என்பதைவிட காங்கிரஸ் வளர்வதைத் தடுப்பது மட்டுமே தமிழக மீனவர்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழர்களின் நலனாக அமையும்.

13 டிசம்பர், 2010

திருமணம் இன்றி ஒன்றி வாழுதல் !

ஒன்றி வாழுதல் லிவிங்க் டு கெதருக்கு சரியான மொழிப் பெயர்ப்பு என்று நினைக்கிறேன். திருமணம் என்பது வெறும் சடங்கு என்பதைத் தாண்டி சட்டப் பாதுகாப்பு என்று சொல்வதே சரியானது. சடங்கில்லாத, சட்டப் பாதுகாப்பு இல்லாத திருமண வாழ்க்கை, இதை ஏற்கனவே விலங்குகளும் பறவை இனங்களும் ஏனைய உயிரினங்களும் செய்துவருகின்றன. நாம இது ஏதோ புதுசு, சமூக சீரழிவின் முன்னறிவிப்பு என்றெல்லாம் கூப்பாடு போடுகிறோம். மனம் ஒத்த இருவர் சேர்ந்துவாழ சமூகத்தின் முன்பு அறிவிப்பது என்பது தவிர்த்து திருமணம் என்பதன் வேறு பொருள் என்ன ? தனிமனித பாலியல் தேவைக்கு கட்டுப்பாட்டுடன் கூடிய ஒரு அமைப்பு என்பது தானே திருமணம். அதன் பக்கவிளைவாக மக்கட்பேறு, அதுவும் இருவரின் ஒப்புதலும் உடல் நலமும் ஒத்துழைத்தால் மட்டுமே. மற்றபடி திருமணம் ஆனவர்கள் குழந்தைப் பெறுவது அவர்களின் தனிமனித உரிமை. சந்ததிகளைப் பெறுவது இல்லவாழ்க்கையின் நீட்சி என்பதாகத்தான் வெளிநாட்டுத் திருமணங்களின் புரிதல். நான் சிங்கை வந்த புதிதில் தங்கி இருந்த வீட்டின் (தமிழ்)தம்பதிகள் திருமணம் ஆகதவர்கள் என்பது ஆறுமாதம் கழித்து அவர்கள் தங்களுடைய திருமண அழைப்பிதழை நீட்டிய போது தான் தெரிந்தது வியப்பாக இருந்தது. அவர்களைப் பொருத்த அளவில் சொத்துரிமை மற்றும் வாரிசுகளைப் பெற்றுக் கொள்ளுதல் என்னும் போது சடங்கும் சட்ட ஒப்புதலும் தேவைப்படுகிறது என்னும் போது திருமணம் என்கிற சடங்கில் இணைந்து கொள்கிறார்கள். மற்றபடி மனம் ஒத்த பருவ வயதினருக்கிடையேயான ஈர்ப்பு என்பதில் அவர்களுடைய தேவைகளை அதுவரையில் பகிர்ந்தே வந்திருக்கிறார்கள் எனப் புரிந்தது. இருவருக்கிடையே பெற்றோர்கள் எதிர்ப்பு, எதிர்ப்பார்ப்பு என்கிற தலையீடுகள் எதுவும் இல்லை. அவர்களின் திருமணத்திற்கு முன்பு அவர்களுடைய பெற்றோர்களும் அந்த வீட்டுக்கு வந்து சென்று கொண்டு தான் இருந்தார்கள். இருவரின் திருமணச் சடங்கின் தேவை என்பது வெளி உலகினருக்கும் சமூகத்திற்குமேயன்றி ஒருவருக்கொருவர் புரிதல் தொடர்பானது அல்ல என்பதைப் புரிந்தது. இடையே ஒருவருக்கொருவர் கருத்துவேறுபாடு என்றாலும் அந்த திருமணமற்ற வாழ்க்கையை சகித்துக் கொண்டிருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால் அந்த சூழலில் அவர்கள் பிரிவதற்கும் சமூகத்தின் ஒப்புதல் எதுவும் தேவைப்பட்டிருக்காது என்ற வகையில் அவர்கள் சேர்ந்து வாழுதல் என்பதில் மூன்றாம் நபர் அல்லது சமூக ஒப்புதல் தேவை அற்ற ஒன்று என்பதாகத் தெரிந்தது.

இந்தியாவில் இது போன்று நடந்தால் கலாச்சாரம் பண்பாடு என்கிற பெயரில் கூச்சல் போடுகிறார்கள். இன்றைய சமூக அமைப்பு மற்றும் பொருளியல் வாழ்க்கையில் 30 வயதுவரையில் கூட திருமண பேச்சுகளே நடப்பதில்லை. 30 வயதுவரை தனி ஒருவரின் பாலியல் தேவைக்கு சமூகம் சொல்லும் தீர்வும் ஒன்றுமே இல்லை. எந்த ஒரு கெடுதலும் இல்லாத தன்னின்ப (சுய இன்ப) நுகர்சியைக் கூட சமூகம் ஏற்பது கிடையாது என்பது வெளிப்படை. முற்றும் துறந்தோம் என்று சொல்லிக் கொள்ளும் சாமியார்களும் எதையும் அடக்கமுடியாமல் சிக்கிக் கொள்வதை கண்ணுறும் நாம், 30 வயது வரையான இளைஞர்களின் பாலியல் தேவைக்கான தீர்வு என்பதை 'அதிகாலையில் நான்கு மணிக்கு எழுந்து பச்சைத் தண்ணீரை தலையில் கொட்டிக் கொண்டு சுப்ரபாதம் ஸ்லோகம் சொல்லு' என்கிற எளிய வழியைச் சொல்லிக் கொடுப்பதைத் தவிர்த்து வேறெதும் உண்டா ? இந்துமதத்திலாவது மறைமுகமாக சுய இன்பத்தை அனுமதிக்கிறார்கள், வெளிப்படையாக வேதத்தைக் காட்டி எதிர்ப்பது இல்லை. ஆனால் 30 வயதுவரை திருமணம் ஆகாத பிற மதங்களின் இளைஞர்களுக்கு சொர்கம் / நகரம் பயம் காட்டி அந்த உரிமையும் தடுக்கப்படுகிறது. ஆனாலும் அதை இளைஞர்கள் மீறியே வருகிறார்கள் என்பதை எவரும் ஒப்புக் கொள்வதில்லை. குறிப்பாகச் சொல்லப் போனால் திருமணம் ஆகாத பருவ வயதினரின் பாலியல் தேவைக்கு எந்த மதவாதிகளும், மதமும் எந்த ஒரு தீர்வையும் சொல்லவே இல்லை. காரணம் மதங்கள் எதுவும் காலம் தாண்டி சிந்திக்கவில்லை. மதங்களின் வாழ்வியல் முறையில் பருவ வயதில் திருமணம் என்பதைத்தான் அவை தோன்றிய காலத்தில் பார்த்து வந்திருக்கின்றன. இன்றைய தேதியில் 13 / 14 பருவ வயதில் அரசியல் சட்டங்களும் திருமணங்களை ஏற்பது இல்லை என்னும் போது மதங்களின் பாலியல் சார்ந்த கொள்கைகள் காலம் தாண்டியவை என்று சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை. பருவ வயதின் விதவைகள் - இன்றைய தேதிக்கு மதங்கள் மறுமணத்திற்கு எதிர்ப்புக்காட்டாத நிலையில் அதுபற்றி சொல்ல இங்குத் தேவை இல்லை என்று நினைக்கிறேன்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரையில் கூட ஒருவர் எத்தனை மனைவிகளை ஒரே நேரத்தில் கொண்டிருக்கலாம் மற்றும் சின்ன வீட்டுக் கணக்குகள் இவை ஆண்களின் பொருளாதாரம் சார்ந்த ஒன்றாக இருந்ததேத் தவிர்த்து சட்டம் அதனை தடை செய்யவில்லை. மேலும் பல மனைவிகளை, சின்ன வீடுகளை உடையவர் என்றால் ஒரு கவுரவத்தையே வழங்கி வந்திருக்கிறார்கள். பழந்தமிழகத்தின் / இந்தியாவின் திருமண வாழ்க்கையின் சாட்சியாக இந்துமத தெய்வங்கள் பல மனைவிகளை உடையவர்களாக காட்டப்பட்டுவருகிறார்கள். கம்ப இராமயணம் தவிர்த்து இராமன் பிறமொழி இராமயணங்களில் வீரத்திற்காகப் போற்றப்பட்டானே யன்றி சீதையை மட்டும் மணந்தவன் என்பதற்கு அல்ல. பின்னர் சமூக மாற்றத்தின் விளைவாக இராமனின் அந்த பண்பு உயர்வாகக் காட்டப்படுகிறது.

திருமணம் செய்யாமல் இருவர் சேர்ந்துவாழலாம் என்பது தனிமனித விருப்பு சார்ந்த ஒன்று அதை சமூகம் தடை போட ஒன்றும் இல்லை. பாலியல் தொழிலாளியிடம் செல்வது, பாதுகாப்பற்ற உடலுறவு, எய்ட்ஸ் பயம் இவை எதுவுமே இல்லாமல் மன ஒப்புதலுடன் கூடிய வாழ்க்கை உடல் நலம் சார்ந்தது ஆகும். பாலியல் தொழிலாளியிடம் செல்வோரை சமூகம் ஒதுக்கி வைக்காத போது சேர்ந்து வாழும் இருவரை சமூகம் விமர்சிப்பது தேவையற்ற ஒன்று. லிவிங் டுகெதர் வாழ்கை முறையை சந்ததிகள் தொடர்ச்சி, மனித இனத் தொடர்ச்சியின் முடிச்சுகளாக நினைப்பதால் நான் ஆதரிக்கவில்லை என்றாலும் அவர்களின் தேவையை புரிந்து கொள்கிறேன், காரணம் தனிமனித பாலியல் தேவைக்கு பாதுக்காப்பான வழி மற்றும் இருவருக்கிடையேயான பிற பகிர்வுகள் என்பதால், அதாவது லிவ்ங்க் டுகெதர் என்னைப் பொருத்த அளவில் தனிமனித ஆண் பெண் இருவருக்கிடையேயான காமம் கலந்த நட்பு. கோகுலத்தில் கண்ணன் கூட கோபியர்களுடன் திருமணம் ஆகாமல் லிவிங்டுகெதர் தானாம் :)

9 டிசம்பர், 2010

கொஞ்சம் தமிழக அரசியல் !

நாளிதழலைத் திறந்தாலே நாறிப் போன ஸ்பெக்ட்ரம் விவகார செய்திகள் தான். இதில் சம்பந்தப்பட்ட தரப்பு அரசின் வருமான இழப்பு ஊழல் ஆகாது என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். அரசுக்கு பல்வேறு வகைகளில், வரிகளில் கிடைக்கும் பணம் தான் நலத்திட்டங்களுக்கும், அரசு செலவீனங்களுக்கும் பயன்படுகிறது, அதைச் சரியாகச் செய்யாமல் அரசுக்கு வருமான இழப்பை அதையும் லட்சம் கோடிக் கணக்கில் செய்துவிட்டு தொடர்வதற்கு எந்த ஒரு அரசும் சர்வாதிகார அரசாக இருந்தால் மட்டுமே முடியும், ஆனால் அதை மக்கள் ஆட்சி என்றே சொல்லிக் கொண்டு தொடர்கிறார்கள். இன்றைய செய்தி அதிர்ச்சியை அளித்தது, நீதிபதிகள் திகைத்தார்களாம். அதாவது ஸ்பெக்டரம் ஏலம் பெற அரசுடமை வங்கிகளிடம் தனியார் பெற்ற கடன் இருபதாயிரம் கோடி. இவ்வாறு கடன் பெற்றே அந்த ஏலத்தை எடுத்து 10 மடங்கு இலாபத்திற்கு விற்றிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு ஏழைமாணவன் கல்விக்கடனுக்குச் சென்றால் அப்பன்காரன் வங்கிக்கடன் வைத்திருந்தால் கொடுக்க முடியாது என்று திருப்பி அனுப்புகின்றன வங்கிகள், அவர்கள் கடன் கேட்கும் தொகையோ இன்றைய நாணய மதிப்புகளில் சொற்பமே. ஆனால் அரசியல்வாதிகள் கண் அசைத்தால் ஆயிரம் கோடிகளில் கடன் வழங்குகிறது இந்திய அரசுடமை வங்கிகள். தனது நிர்வாகத்தின் கீழ் பணி புரிந்த அமைச்சர் ராசா ஊழல் செய்ததில் தனக்கு தொடர்பில்லை என்பது போலவும், தனது பரிந்துரைகளை அவர் கேட்கவில்லை என்றும் கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்டேன், நாடாளுமன்றத்தை நடத்தவிடுங்கள் என்று இயலாமையாக கூறுகிறது மன்மோகன் அரசு. நிர்வாகம் சரியாக செயல்படாமல் போனதற்கு, ஊழல் மலிந்ததற்கும் நிர்வாகி பொறுப்பு ஏற்கமாட்டார் என்றால் நிர்வாகி என்கிற பதவியின் பொருள் என்ன ? இவர்களெல்லாம் ஏன் தொடரவேண்டும் ?

ஊழல் நடைபெற்றதை கண்டுபிடித்தால் ராசாவை கட்சியை விட்டே நீக்கி சமூக நீதி காட்கிறோம் என்கிறார் கருணாநிதி, ஊழல் நடைபெற்றது நிருபனம் செய்யப்பட்டால் ராசாவுக்கு கிடைப்பது சிறை தண்டனை, இவர் கட்சியை விட்டு நீக்கினால் என்ன நீக்காவிட்டால் என்ன, ஒரு குற்றவாளிக்கு உறுப்பினர் அட்டை கொடுப்பது / கொடுக்காதது பற்றி யாரும் கேட்கப்போவதில்லையே. அப்படியே என்றாலும் கூட கட்சியை விட்டு நீக்குவதெல்லாம் ஒரு தண்டனையா ? அதிமுக ஆட்சியில் ஊழல் செய்து தண்டனை அடைந்தவர்கள் இவருடைய கட்சியில் இன்றைக்கு உறுப்பினர்களாக இருக்கிறார்களா ? இல்லையா ? கட்சியை விட்டு நீக்குவது, நீக்காதது தனிப்பட்ட ஊழல் உறுப்பினருக்கு (ஊழலை செய்தபின்பு) என்ன நட்டம் ஏற்பட்டுவிடப் போகிறது ?

தமிழகத்தில் அதிமுக, தேமுதிக, பாஜக, காங்கிரஸ் இளங்கோவன் உட்பட ஸ்பெக்டரம் பற்றி கிழித்துவரும் வேளையில் பாமக மட்டும் அதுபற்றி இம்மி அளவும் மூச்சுவிடவில்லை என்பது புதிராகவே இருக்கிறது. கருணாநிதி மீது திராவிட சிந்தனையாளர், தமிழ்பற்றாளர், ஈழ ஆதரவாளர் என்கிற எண்ணமெல்லாம் இருந்ததாலேயே அவர் மீது நான் உட்பட பல்வேறு கட்சிசாராதவர்கள் அன்பு கொண்டிருந்தனர். இன்றைய தேதிக்கு திராவிடம் என்பது கட்சிப் பெயரில் இருக்கிறது என்பது தவிர்த்து அது ஒரு தனியார் உடமை வாரிசு உரிமை கட்சியாகிவிட்டது, வராலாறு பழிக்கும் என்பதற்காக அவசர கெதியில் இதுவரை ஐந்து முறை முதல்வராக இருந்தும் செய்திடாத உலக தமிழ்மாநாட்டை பெயரை மாற்றி முதல் செம்மொழி மாநாடு என்று அறிவித்து குடும்பவிழாவாக மாற்றினார். ஈழ நலம் முழுவதுமாக கைகழுவப் பெற்றது, எந்த ஒரு காரணத்தினால் கருணாநிதி ஆதரவாளர் என்கிற எண்ணம் இருந்ததோ, அந்த காரணங்கள் எதுவுமே கருணாநிதியிடம் இல்லை. இவர் குடும்பத்து பங்காளிச் சண்டைகளில் மதுரையில் தினகரனின் வேலைப்பார்த்த மூவர் படுகொலை செய்யப்பட்டனர். இதுவரை அது தொடர்புடையவர்கள் எவருக்குமே தண்டனைகள் வழங்கப்படவில்லை, பங்காளிகள் ஒன்று சேர்ந்த போது இதயம் இனித்து, கண்கள் பனித்தன என்றால்...... அவ்வளவு சுயநலவாதியா நீய்யீ........... என்று நினைக்க கருணாநிதிக்கு ஆதரவான நெஞ்சம் கசந்து நஞ்சை இறக்கி வைத்தது.

ஈழம் தவிர்த்து கூட கருணாநிதி ஆட்சித் தொடரவே வேண்டும் என்பதற்கு எந்த ஒரு சிறப்புக் காரணமும் தென்படவே இல்லை. சந்தர்பம் அமைந்தால் சிறுபான்மை காவலர் கருணாநிதி மதவாதக்கட்சியுடன் கூட கூட்டணி அமைப்பார் என்பது ஏற்கனவே உறுதியான ஒன்று தான். திராவிட இயக்கம் அதன் இலக்கை கருணாநிதியை வைத்து எட்டிவிட்டதால் கருணாநிதிக்கு திராவிடச் சிந்தனைகள் இனி தேவை அற்றதாகவே நினைத்துக் கொள்ளலாம் என்று சொல்லும் நிலைக்கு மக்கள் வாழ்க்கைத்தரத்தை சிறப்பாக ஆக்கி இருந்தால் கருணாநிதியின் திராவிட ஆட்சி தொடரலாம் என்றே சொல்லமுடியும், நிலைமை அவ்வாறு இல்லை. ஏழைகள் ஒரு ரூபாய் அரிசிக்கு கிடைத்தால் பிழைப்பையே ஓட்டமுடியும் என்கிற நிலையில் தான் கருணாநிதி ஆட்சி வைத்திருக்கிறது, ஆனால் கருணாநிதியின் வாரிசுகளோ டாட்டா அம்பானி ரேஞ்சுக்கு வளர்ந்துவருகிறார்கள். ஒரு தமிழனின் வாரிசுகள் அம்பானிக்கு ஈடுகொடுக்கிறார்கள் அல்லது பின்னுக்கு தள்ளுகிறார்கள் என்பது தமிழனுக்கு பெருமையா ? சத்தியமாக எனக்கு பெருமையாகத் தெரியவில்லை. குடும்பத்தை அம்பானிகள் ஆக்கியது தவிர்த்து ஒரு ரூபாய்க்கு அரிசி கிடைத்தால் தான் வாழமுடியும் என்கிற நிலையை ஏற்படுத்தி இருப்பதைத் தவிர்த்து கருணாநிதியின் எந்த ஒரு சாதனை கருணாநிதி ஆட்சி தொடரவேண்டும் என்கிறதோ அதை குப்பன் சுப்பன் கூட பதவியில் இருந்தால் செய்துவிட்டு போய்விடுவான்.

7 டிசம்பர், 2010

கமல் கவிதைக்கு வெளம்பரம் கொடுக்கும் இந்துத்துவாக்கள் !

கமலஹாசன் சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் அவர் அதையும் தாண்டி பல்கலை அறிஞனாகக் காட்டிக் கொள்ள கவிதை எழுதுவார், பாடுவார். எகிரும் குரலில் (ஹைப் பிச்) பாடவல்லவர், அவ்வாறு நிறைய பாடல் பாடி இருக்கிறார். மாடர்ன் ஆர்ட் எனப்படும் வரைகலையைப் பற்றி (காதலா காதலா) கேலி செய்பவர், அன்பே சிவம் படத்தில் மாடர்ன் ஆர்டை முதன்மைபடுத்தி இருப்பார். புரியாத ஒன்றை கிறுக்கி கவிதை என்று சொல்லி பேசுவார். அவருக்கு ஏன் வேண்டாத வேலை... இருக்கிற திறமைக்கு வேலை செய்யவே நேரம் போதவில்லை, இதுல யாருக்கும் புரியாத கவிதை வேறையா ? கலைத்தாயின் இடுப்பில் இருக்கும் குழந்தைக்கு எப்போதும் கலைதாகம் எடுத்து பால், வெண்ணை, தயிரோடு ஆட்டுக்கால் பாயாவும் கேட்கிறது என்பதாக வைத்துக் கொள்வோம், ஆனால் அவை செறிக்க வேண்டாமா ? :)

*****

மன்மதன் அம்பு கலைப்படையலில் தொட்டுக்கைக்காக கமலே ஒரு பாடலை இயற்றிப் பாடி இருக்கிறாராம். படிச்சுப் பார்த்தேன், எழுத்துகளும் சொற்களும் தமிழ் என்பது தவிர்த்து எனக்கு எதுவும் புரியவில்லை. அதைப் புரிந்து கொண்டதாகச் சொல்லும் இந்துத்துவா(லா)க்கள், இந்து மதத்தை கமல் கொச்சைப்படுத்துவிட்டார் (மீண்டும் சீண்டும் கமல்) என்று குதிக்கிறார்கள். படுக்கை அறையில் நிகழ்வான பாடலில் அரங்கநாதனையும் வரலட்சுமியையும் இழுத்து அசிங்கப்படுத்தியதாகவும், கோடிக்கணக்கான இந்துக்களை புண்படுத்திவிட்டதாகக் கூறி கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்களாம்.

இந்து மதம் எங்கே புண்படுகிறது ? கோவிலுக்குள் நுழைந்தால் கோபுரத்தில் இருக்கும், சுற்றில் இருக்கும், தூண்களில் இருக்கும் சிலைகளில் வடிக்கப்பட்டு இருக்கும் எந்த ஒன்றையும் விட பாடல்வரிகளில் என்ன ஆபசம் இருக்கிறது என்றே தேடிப்பார்த்தாலும் புலப்படவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

ஆண்டாள் பாடிய பாடல், இதில் இருக்கும் விரசம், ஆபாசம் அளவுக்கு கமல் எழுதிய பாடலில் இருகிறதா தெரியவில்லை.


''குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலின்மேல
மெத்தென்ற சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பை வாய்திறவாய்
மைத்தடங் கண்ணீனாய் நீயுள் மணாளனை
எத்தனை போதும் துயிலெழு வொட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லையால்..."38
(மேற்கண்ட ஆண்டாள் பாடலின் பொருளுக்கு இங்கே செல்லுங்கள்)

ஆண்டாள் பாடியவற்றை திருப்பவை, திருவெம்பாவை என்றெல்லாம் பக்தி இலக்கியதில் வைத்து கோவிலிலும் பாடுகிறார்கள். திரையில் நாயகன் நாயகியைப் பாடுவதில் விரசமாம். அதில் ரங்கநாதன் வரலட்சுமி என்ற வரிகள் இல்லாவிட்டால் விரசமாக தோன்றாது போலும்.

கமல் என்ற மன்மதக் கலைஞன் மீது அம்பு வீசுகிறார்கள் என்றும், அந்தப் பாடலில் ஆபாசம் இல்லை என்றோ நான் எழுதவில்லை, ஆபாசம், காமம் என்று வரையறுக்கப்பட்டவை அனைத்துமே (இன்றைய) இந்து மதத்தின் பகுதியாவும் இருக்கிறது, இதில் குறிப்பிட்டு சிலரை எதிர்த்து மதத்தை காப்பாற்றுகிறேன் என்று கிளம்பும் பேர்வழிகள் நாயகி / நாயகன் பாவங்களில் பாடிய வழிபாட்டுப் பாடல்களை தீயிட்டுக் கொளுத்துவார்களா ? இரண்டாவது பொண்டாட்டியை ஏன் இந்த சாமி வச்சிருக்கிறது என்று கேட்கும் இன்றைய சிறுகுழந்தைகளுக்கு பதில் சொல்ல நம்மிடம் பக்தி, சாமி, கதை, கண்ணைக் குத்திடும் என்று சொல்லும் இன்றைய சமய நம்பிக்கையின் மழுப்பல்களைத் தவிர்த்து என்ன இருக்கிறது ?


தொடை தெரிய அணிந்திருக்கும் அண்டர்வேர் ஆசாமிகளுக்கு கோவணம் கட்டியவர்கள் ஆபாசமாகத் தெரியலாமா ?

3 டிசம்பர், 2010

ரஜினி அரசியலில் இறங்க இதுவே சரியான நேரம் !

தற்போதைய தமிழக அரசியல் நிலவரத்தை ஸ்பெக்டரம் விவாகாரம் முன், ஸ்பெக்டர்ம் விவகாரத்திற்கு பின் என்று பார்ப்பது பொருத்தமாக இருக்கும். தமிழகத்தில் எப்போதாவது ஏற்படும் அரசியல் வெற்றிடம் இந்த முறை பெரும்திடல் அளவுக்கு விரிந்து கிடக்கிறது. வெற்றிடத்திற்காக காத்திருப்போர் நன்கு பயன்படுத்திக் கொள்ள ஏற்ற நேரம். ஸ்பெக்டர்ம் விவகாரத்தில் மன்மோகன் சிங்கின் அரசிற்கு தொடர்பு இல்லை என்று கொள்வதற்கு ஒன்றும் இல்லை. இந்தியாவில் அரசியல் தொடர்பு இல்லாதா பெரிய நிறுவனங்களே இல்லை என்னும் போது அவர்களுக்கு அரசுகளின் ஒப்பந்தங்களின் (டெண்டர்களினால்) கிடைக்கும் லாபத்தை எந்த ஒரு அரசியல் கட்சியும் கணக்கு போட்டே கமிசன் பெறுகிறார்கள். இந்திய அரசியல் கட்சிகள் அதுவும் ஆளும் கட்சி தகுதி பெற்ற எந்த ஒரு அரசியல் கட்சியும் தொண்டர்களின் பணத்தையோ தலைவர்களின் கைகாசையோ, கட்சி நிதியையோ தேர்தலுக்கு பயன்படுத்துவதில்லை. அனைத்தும் நிறுவன முதலாளிகளின் கைவண்ணத்தால் நடக்கிறது. இந்திய அமைச்சர்களாக யார் யார் வரவேண்டும் என்பதை பொதுமக்கள், முதலமைச்சர், பிரதமர் முடிவு செய்வதைவிட நிறுவன முதலாளிகளே முடிவு செய்கிறார்கள் என்பதை நீரா ராடியா - ரத்தன் டாட்டா பேர உரையாடல்களில் இருந்து அம்பலமாகி உள்ளது.

ஸ்பெக்டரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தனியாருக்கு குறைத்து தாரை வார்த்து கொடுத்ததில் திமுக அமைச்சருக்கு மட்டுமே பங்கு இருக்கிறது என்று நம்புவதற்கு இல்லை. இந்திய அளவில் ஆட்சி நடத்தும் மன்மோகன் அரசிற்கு ராசாவின் செயல்பாடுகள் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை, அப்படி ஒப்புக் கொண்டால் பிரதமர் பதவிக்கு தகுதி இல்லை என்றே பொருள். செயல்பாடுகள் தெரிந்து இருந்தால் முறைகேடுகளில் பங்கு என்று தெரிந்துவிடும் சிக்கலில் மத்திய அரசு தவிக்கிறது. கடந்த 14 நாட்களாக பாராளுமன்றம் முடக்கமே இவற்றைச் சொல்கிறது. மடியில் கனம் இல்லை என்றால் கூட்டுக் குழு விசாரணைக்கு ஒப்புக் கொள்ள வேண்டியது தானே என்று பல்வேறு தரப்பினரும் கேட்கின்றனர். இந்த சூழலில் தன்னை கை தூய்மையாக காட்டிக் கொள்ள காங்கிரசுக்கு திமுகவை கழட்டி விடுவதைத் தவிர்த்து வேறு வழி இல்லை. ஜெண்டில் மேன் அக்ரிமெண்ட் போல் போட்டுக் கொடுத்துக் கொள்ளாமல் அவரவர் வழியில் செல்லலாம் என்றே விலகிக் கொள்வார்கள் என்று நினைக்க வேண்டி இருக்கிறது. இருந்தாலும் நீதிமன்றமும், எதிர்கட்சிகளும் இதை அப்படியே விட்டுவிடும் என்று சொல்வதற்கில்லை. திமுகவை காங்கிரஸ் கழட்டிவிடும் சூழலில் காங்கிரஸ் மூன்றாவது அணியாக களம் இறங்கும் வாய்பிருக்கிறது. விஜயகாந்த், பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்த்துக் கொண்டு காங்கிரஸ் மூன்றாவது அணிக்கு தலைமை ஏற்று முயற்சிக்கக் கூடும் என்றே கருதுகிறேன். ஏனெனில் சோனியா ஜெ வுடன் கூட்டணிக்கு ஒப்புக் கொள்ளமாட்டார். மூன்று அணியாக தமிழக தேர்தல் களம் இருந்தால் மீண்டும் திமுகவிற்கு வாய்ப்பு கிடைக்கும், அதை காங், ஜெ தொடர விடுவும் மாட்டார்கள். இவை ஊகம் தான். ஆனால்...

*****

இன்றைய தேதியில் தமிழகத்தில் படித்த வாக்காளர்களுக்கும், அரசியல் வெறுப்புணர்வாளர்களுக்கும் ஜெ மற்றும் கருணாநிதியே மீண்டும் மீண்டும் தமிழகத்தை பீடித்திருப்பதில் விருப்பமில்லை. கருணாநிதியின் இலவச டிவி ஓரளவு பயனளித்திருக்கிறது, கிரமாத்தினர் கூட ஸ்பெக்டரம் பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள், அரசியல் மாற்றம் பற்றி கிராமத்தினர் விவாதிக்கின்றனர். எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு இருந்த அரசியல் வெற்றிடம் தற்போதும் ஏற்பட்டுள்ளது, அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியவர் குறிப்பாக சூப்பர் ஸ்டார் பயன்படுத்திக் கொண்டால் தமிழக அரசியல் களம் முற்றிலுமாக மாறும், எனக்கு ஜெ, மற்றும் கருணாநிதி மீது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் கிடையாது. அவர்கள் எந்த அளவுக்கு தமிழர் நலன் சார்ந்து செயல்படுகிறார்கள் என்பதை மட்டும் பார்ப்பேன். என்போன்றோர் பலரின் நிலைப்பாடும் இதுவே. ஈழத்தமிழர் நலனை, இராமேஸ்வரம் மீனவர் நலனை புறக்கணித்த, புறக்கணிக்கும் காங்கிரசுடன் கையை விடாது பற்றும் இவர்களையே தொடர்ந்து முதல்வராக வைத்துக் கொள்ள தமிழனுக்கு தலையெழுத்தா என்ன ? அதற்கு பதிலாக இராஜபக்சேவை உதைக்கச் சொல்லி வெளிப்படையாக பேசிய ரஜினி காந்த் அரசியல் அனுபவம் இல்லாவிட்டாலும் தமிழர்கள் எதிர்பார்க்கும் மாற்று அரசியல்வாதிக்கு தகுதியானவராகவே தெரிகிறார். மாறன் சகோதர்களுக்கு இருக்கும் மீடியா பலம் திமுக தலைமையின் மீது இருக்கும் கசப்புணர்வு இவை அவர்களின் எந்திரன் ரஜினி பக்கம் சாதகமாக, பிரச்சாரமாக திருப்பும் வாய்ப்பும் இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் இந்த சூழலில் அரசியலுக்கு வரவேண்டும், இதைவிட்டால் வாய்புகள் சிறப்பாக அமையும் வேளைகள் அமைந்தாலும், அவரது ஏறும் வயதிற்கு சரிவருமா என்பது தெரியவில்லை.

30 நவம்பர், 2010

சென்னை அருகே ஒரு போலி சுங்கச் சாவடி !

மகளின் பள்ளி விடுமுறையை அடுத்து மகனையும் மகளையும் தமிழகத்திற்கு அழைத்துச் செல்லும் திட்டமாக ஒருவார காலம் சென்று வந்தேன். மழைகாலம், எல்லோரையும் பார்த்துவருவது இயலாத செயல், ஒருவார காலமே இடைவெளி என்பதால் நண்பர்களிடம் சொல்லிக் கொள்ளவில்லை. சென்னை சென்றது ஓடபோன் இணைப்புப் பெற்று கூகுள் பஸ்ஸில் அறிவித்திருந்தேன். அதைப் பார்த்து அழைத்தவர்கள் கேபிள், அப்துல்லா, லயன் சுதாகர் (பித்தனின் வாக்கு), இவர்களுடன் கேஆர்பி செந்திலையும் சந்திக்க முடிந்தது.
கேஆர்பி செந்தில் மற்றும் கேபிள் சங்கர்
பித்தன் வாக்கு சுதாகர், அப்துல்லா
அப்துல்லா மற்றும் செங்கதிர்

20 ஆம் தேதி சென்னைச் சென்றேன், 22 ஆம் தேதி சென்னையில் சிறு வேலை இருந்ததால் சென்னையில் 22 ஆம் தேதி வரை தங்கினேன். சிங்கையில் இருந்து சென்னைச் செல்லும் பயணிகளில் 90 விழுக்காடு தமிழர்கள், ஆனாலும் ஏர் இந்திய விமான சேவையின் அறிவிப்புகள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் தான் வருகிறது. இறுக்கையில் டிவி வைத்திருக்கிறார்கள், மருந்துக்கு ஒரு தமிழ் படம் கூடப் போடவில்லை. இந்தியை வலுக்கட்டாயமாக திணிப்பதில் என்ன ஒரு கொல வெறியோ. இந்தி ஒழிகன்னு விமானத்தின் நடுப்பகுதிக்கு வந்து கத்தனும் போல் இருந்தது. அவனுங்களுக்கு தமிழ் தெரியாதேன்னு விட்டுவிட்டேன். வழக்கம் போல் பாட்டிகளே விமானப் பணிப் பெண்ணாக வந்தார்கள். உலகிலேயே ரிடையர்ட் வயது விமானப் பணிப் பெண்ணை ஏர் இந்தியா சேவையில் தான் பார்க்க முடியும். திரும்பும் போதும் அதே கதைதான். இந்தியாவிற்குச் செல்லும் விமானங்களில் கட்டுப்படி கட்டண (பட்ஜட்) சேவை இல்லாத பொது விமான சேவையில் மிகவும் மட்டமான சேவைக்கு பதக்கம் கொடுத்தால் ஏர் இந்தியாவுக்குக் கொடுக்க நான் வாக்களிப்பேன். விமானங்களில் பார்க்க முடியாத தமிழ் விமான நிலையத்தில் பார்க்க முடிந்தது, அறிவிப்புகள் தமிழில் இருந்தன. சென்னை செல்லும் பிற நாடுகளின் விமானங்கள் தமிழில் அறிவிப்புகள் செய்யும் போது ஏர் இந்தியா விமானத்திற்கு மட்டும் என்ன எழவு நேர்ந்தது ?

*****

தமிழக பயணத்தின் ஊடாக பிறந்த ஊருக்குச் சென்று இரு நாட்கள் இருந்துவிட்டு, மதுரையில் டிபிசிடி மற்றும் சீனா ஐயா அழைப்பின் பேரில் மதுரைக்குச் சென்று வந்தேன். மழை மிகுதியாக இருந்ததால் ஏற்கனவே சந்தித்தவர்கள் தவிர்த்து யாரையும் அழைத்து தொந்தரவு செய்ய விரும்பவில்லை. 24 ஆம் தேதி பின்னிரவில் பேருந்தில் ஏறி தஞ்சை சென்று அங்கிருந்து புதுக்கோட்டை வழி மதுரையை அடைந்தேன். காலை 6 மணி ஆகி இருந்தது. மாட்டுத் தாவணி பேருந்து நிலையை எதிரே உள்ள விடுதிகளில் ஏற்கனவே தங்கி இருந்து பட்டதால் அங்கு தங்க விருப்பம் இன்றி வேறுறொரு விடுதி முகவரியைக் கேட்டு அங்கு சென்றேன், அன்று மங்கல நாளாம் விடுதிகள் அனைத்தும் அறைகள் இல்லை என்று கை விரித்தன. அப்பறம் அங்கு டிபிசிடி வந்து வேறொரு விடுதிக்கு அழைத்து சென்றார். அங்கும் இல்லை, அறை இல்லை என்றவரிடம் அண்ணனை எழுப்பிவிடுவேன் என்று டிபிசிடி மிரட்டிப் பார்த்தார். அண்ணனுக்கு அங்கு மதிப்பு இல்லை, திரும்பி எதிரே இருந்த மற்றொரு விடுதியில் இடம் இருந்தது, 300 ரூபாய் என்றார்கள், பணத்தை முன்பணமுமாகச் சேர்த்து 600 கொடுத்துவிட்டு அறைக்கு சென்றால் அரசு மருத்துவ மனையின் ஒரு அறையில் படுக்கைப் போட்டது போல் இருந்தது, பினாயல் வாடை போதாக் குறைக்கு பச்சை நிறத்தில் படுக்கை. எந்த வசதியும் இல்லை, 300க்கு இவ்வளவு தான், ஆனாலும் அறை கிடைக்காத சூழலில் ? அங்கே விட்டுச் சென்ற டிபிசிடி 10 நிமிடத்தில் அழைத்தார். அண்ணே இங்கு சாரதா இராஜனில் டிலக்ஸ் ரூம் 2,500 டபுள் ரூம் 1,700 என்றார். 1,700 க்கு உள்ளதை பேசி முடித்துவிடு என்றேன், கீழே வந்து அறையைக் காலி செய்வதாகச் சொல்ல, 300ம் அம்பேல்.
சீனா ஐயா
ஜாலி ஜம்பர்
தருமி ஐயா
டிபிசிடி
கோவியார் என்கிற நான்

சாரதா இராஜனில் அறையை எடுத்துவிட்டு சீனா மற்றும் தருமி ஐயாவை அழைத்து வருகையைச் சொன்னேன். 30 நிமிடத்தில் காலை 9.30 மணி அளவில் சீனா ஐயா வந்தார். அவருடன் காலை உணவு எடுத்துவிட்டு பேசிக் கொண்டு இருந்தோம், பிறகு தருமி ஐயா வந்தார், மதிய உணவு நேரம் ஆகி இருந்தது, அருகில் இருந்த மீனாட்சி பவனில் உணவு அருந்தி சிறிது ஓய்வு எடுத்துவிட்டு மாலை 3:30 மணிக்கு தருமி ஐயா விடைபெற்றார், பிறகு வீட்டுக்கு உணவு அருந்த சென்ற சீனா ஐயா குட்டித் தூக்கம் போட்டுவிட்டு மாலை 5 மணிக்கு வந்தார், பிறகு ஜாலி ஜம்பர் வந்தார், பேசினோம்... பேசினோம் மாலை 6 ஆகி இருந்தது, பிறகு டிபிசிடி திரும்பவும் வந்து மூவருடன் சிறிது நேரம் கதைத்துவிட்டு நேரம் ஆகவே மாலை 7 மணிக்கு அறையை காலி செய்து அனைவரிடம் விடை பெற்று பிறந்த ஊருக்குத் திரும்பினேன் வந்து சேரும் போது இரவு 3 மணி ஆகி இருந்தது. மதுரையில் பிற பதிவர்களையும் சந்திக்க ஆவல் இருந்தாலும், அன்று வியாழன் வேலை நாள், நல்ல மழை என்பதால் அழைத்த நண்பர்களை மட்டும் பார்த்துத் திரும்பினேன்.

*********

போலி சுங்கச் சாவடி (Poli-Toll)


தமிழகத்தில் சாலை வசதிகள் விரிவு படுத்தப்பட்டுள்ளது, 120 கிமீ விரைவில் வாகனங்கள் பயணித்தன. இது போன்ற விரைவு சாலைகளை வெளிநாடுகளில் மட்டுமே முன்பு பார்க்க முடியும்,
வாஜ்பாய் அரசு துவங்கிய சாலை நல்ல திட்டம், செயல்படுத்திய அரசுகளை பாராட்டவேண்டும். ஆனாலும் அரசு ஆதரவுகளோடு விரைவு சாலைகளில் தில்லுமுல்லு நடக்கின்றன, புதுவையில் இருந்து சென்னைக்கு காரில் பயணித்தேன், நண்பருடைய கார் தான். மூன்று நண்பர்களாக பாண்டியில் இருந்து சென்னைக்கு பயணித்தோம், முன்னதாக இருவர் ஏற்கனவே சென்னையில் இருந்து புதுவைக்கு அதே காரில் வந்திருந்தனர், திரும்பும் போது என்னையும் அழைத்துச் சென்றனர். திண்டிவனத்திற்கும் மதுராந்தகத்திற்கு இடையே ஒரு டோல் கேட். நண்பர் விவரம் அறிந்தவர் என்பதால் அந்த டோலில் நிற்காமல் போனால் ஒண்ணும் கண்டு கொள்ள மாட்டார்கள், காரணம் ஒரு எம் எல் ஏ தான் தன்னுடைய ஆட்களைப் போட்டு டோல் நடத்திவருகிறார், அந்த இடத்தில் முன்பு டோல் இருந்தது பிறகு வேறொரு இடத்தில் செங்கல்பட்டு தாண்டி சென்னையில் நுழையும் முன்பாக மாற்றிக் கொண்டு சென்றுவிட்டார்கள், ஆளும் கட்சியின் எம் எல் ஏ நேரடியாக இந்த டோலை நடத்துவதால் அரசுகளின் ஆதரவோடு பொதுமக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்றார். திண்டிவனம் மார்க்கமாக ஒரு நாளைக்கு சென்னைக்குச் செல்லும் தனியார் வாகனங்கள் குறைந்தது 10,000 என்றால் டோல் கட்டணம் 20 வைத்துக் கொண்டாலும் நாள் ஒன்றுக்கு 2 லட்ச ரூபாய் கிடைக்கும், 10 பேருக்கு யூனிபார்ம் போட்டு நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ஒரு மாத வருமானம் 60 லட்சம். 10 பேருக்கு நபர் ஒன்றுக்கு 5 ஆயிரம் சம்பளம் கொடுத்தாலும் மீதம் 59+ லட்சம் பகல் கொள்ளையாக நடக்கிறது. நண்பர் காவல் துறையில் இருந்ததால் அவருக்கு இது போலி டோல் என்பது தெரியும், அவருக்கு மட்டுமல்ல, அந்த வழியாகச் செல்லும் அரசு பேருந்துகளுக்கும், நாள் தோறும் சென்று வருபவர்களுக்கும் தெரியும், அவர்களும் இந்த ஏமாற்றுக் கூத்து தெரிவதால் சுங்கம் செலுத்துவதில்லை. நாங்கள் காரை அங்கு நிறுத்தவும் இல்லை, அவர்களும் எங்களை துறத்திப் பிடிக்கவும் இல்லை.

*****

தமிழகம் எங்கும் நல்ல மழை பல ஆண்டுகளுக்குப் பிறகு மதுராந்தகம் ஏரி கடல் போல் காட்சி அளிக்கிறது.

(எனது நண்பர்கள் இராம் என்கிற இராமநாதன் மற்றும் ஜெ.கண்ணன்)

சென்னையில் முதன்மையான சாலைகள் தவிர்த்து தெருக்களில் குண்டும் குழியும், சேறுமாக நிற்கிறது. சிங்காரச் சென்னை மழைகாலத்தில் அசிக்காரச் சென்னையாக நிற்கிறது. முழுவதும் சுரங்க இரயில் பாதைகளைப் போடலாம், மெட்ரோ ரயில் திட்டம் அவ்வளவாக பயனளிக்குமா என்று தெரியவில்லை. சென்னை மக்கள் தொகைக்கு மெட்ரோ இரயிலெல்லாம் போதாது. வெளிநாடுகளில் 20 ஆண்டுகளுக்கு பிறகு வேண்டிய வசதிகள் என்பதை பொதுமக்களுக்கு ஏற்படுத்தித் தருவார்கள். இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தேவைப்படும் வசதியைத்தான் ஏற்படுத்தித் தருகிறார்கள் இரண்டாம் வரிசை அலைக்கற்றை ஊழல் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடியாம். இதில் எத்தனையோ நல்ல திட்டங்களைப் போட்டிருக்கலாம், கிடைக்கும் சில ஆயிரம் கோடி கையூட்டுகளுக்காக அரசு வருமானம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி அம்பேல்.


***

நெருங்கிய பதிவர் நண்பர்களின் அலைபேசி எண்கள் கைவசம் இருந்தும் தொடர்பு கொள்ள இயலவில்லை. சென்று பார்க்க இயலாத கடுமழைச் சூழலில் அழைத்துப் பேசி பிறகு பார்க்காமல் திரும்பவும் மனதில்லை என்பதால் தவிர்த்தேன். மன்னிக்கவும்.

16 நவம்பர், 2010

மதச்சார்பின்மையும் மண்ணாங்கட்டியும் !

நேற்று ஒரு இடுகையைப் படித்ததும் பெருவாரியான இந்திய மதச்சார்பின்மைக்கு வேட்டுவைக்கும் திரியாக இருந்தது. மதச்சார்பின்மை என்பது பல்வேறு மத நம்பிக்கையினர் வாழும் நாட்டில் மிக மிகத் தேவையானது. மதச்சார்பின்மை என்பது சகிப்புத்தன்மை அல்லது புரிந்துணர்வு. மதத்தினரிடையே சகிப்புத் தன்மை குறைவு என்பதால் புரிந்துணர்வு என்பதே பொருத்தம், அதாவது நீ உன்னுடையதை கழுவிக் கொள், நான் என்னுடையதைக் கழுவிக் கொள்கிறேன் யாருக்கும் புறத் தொல்லைகள் இல்லை, மாறாக நான் மட்டும் தான் கழுவவில்லை என்று சுட்டிக் காட்டாதே என்பதே மதங்களுக்கிடையேயான புரிந்துணர்வு. மற்றபடி அவங்க மதம் சார்ந்த விழாவுக்கு இவங்க வருகிறார்களா ? புறக்கணிக்கிறார்களா போன்றவை அனைத்தும் மத நல்லிணக்கம் என்பவையாக சொல்லப்படுகிறது. தற்போதைக்கு மதங்களுக்கிடையே முற்றிலும் நல்லிணகம் என்பதே கிடையாது, அவ்வாறு இணங்குபவர்கள் மதங்களை மறுக்கும் நாத்திகர்கள் மட்டுமே, மத நல்லிணக்கவாதிகள் என்று நாத்திகர்களைச் சொல்லலாம் அவர்களுக்கு எல்லா மதமும் ஒண்ணு தான். சகிப்புத்தன்மையே இல்லாத மதவாதிகளிடம் நல்லிணக்கம் எதிர்பார்க்க முடியுமா ? எனவே தற்போதைய சூழலில் பல்வேறு மதத்தினர் இருக்கும் நாட்டில் இருப்பவை வெறும் புரிந்துணர்வுகள் மட்டுமே, அதற்கும் வேட்டுவைக்க அவ்வப்போது இந்தியா இந்து நாடு, இந்து மதம் தமிழர்களின் தாய் (தந்தை மதம் என்ன ?) போன்ற மதவாத முன்னெடுப்புகள் நூற்றாண்டுகளாக நடந்தேறிவருகிறது.

இன்றைய வாழ்வியல் மற்றும் சமூக அமைப்புகள், அரசுகள் பெருவாரியான நடைமுறைகள் (சிஸ்டம்) ஐரோப்பிய வழிகாட்டலின் வழியாக நடந்தேறிவருகிறது, உதாரணத்திற்குச் சொல்லப் போனால் நாட்காட்டி இவை உலகினருக்கு பொதுவானது, அது போன்றே நேரம் இவையும் பொது, இவை கிரிக்கேரியன் முறையைப் பின்பற்றி ஆங்கிலத்தில் உள்வாங்கி அதையே உலகினருக்கு பொதுவானதாகப் பயன்படுத்திவருகிறோம். குறிப்பாக வெள்ளைக்காரன் உடை. இதையெலலாம் வைத்து உலக நாடுகள் அனைத்தும் கிறித்துவத்திற்கு மாறிவிட்டன என்று சொல்ல முடியுமா ? அல்லது உலகமே ஒரு பெரிய கிறித்துவ நாடு என்று சொல்லிவிட முடியுமா ? இந்தப் பதிவைப் படித்ததும் உண்மையிலேயே வெறுப்பே மிஞ்சியது, இந்தியா இஸ்லாமிய நாடாக மாறிவருகிறதாம், அல்லா கைகாட்டியுள்ளான், நாம் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்கு முயற்சி செய்வோம் இதுவே சரியான சமயம் என்பதாக இந்தியா இஸ்லாமிய நாடு - ஏன் என்பதற்கான காரணங்களைச் சொல்லி இருக்கிறார்கள்.

என்ன கொடுமைசார், இந்துக்களுடன் சேர்ந்துவாழ எங்களுக்கு விருப்பம் இல்லை, ஒத்துவராது நாங்கள் செல்கிறோம் என்று தானே பாகிஸ்தான், பங்களதேஷாக பிரிந்து சென்றார்கள். பிரிந்தவர்களின் நிலையோ படு மோசம், இதில் பங்களாதேசாவது பரவாயில்லை பாகிஸ்தான் பண மதிப்பு இந்திய நாணய மதிப்பைவிட மிகக் குறைவு. மொத்த நாடும் சர்வாதிகாரிகள் கையில் மாறி மாறி சிக்கி அந்த நாட்டை வறுமை கோட்டிற்கு கீழே வைத்திருக்கிறது, மேலும் அரபு நாடுகளில் பணிபுரிந்தால் மட்டுமே பாகிஸ்தானில் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்கிற நிலை, இது தான் இந்தியா பிரிவினையால் முழுக்க இஸ்லாமிய நாடாக மாறிய பாகிஸ்தான் பெற்ற பலன். பங்களாதேஷ் நிலையும் அதே என்றாலும் பொருளாதார வாழ்வியலில் பாகிஸ்தான் மக்களைவிட இவர்கள் பரவாயில்லை காரணம் இராணுவத்திற்கு பாகிஸ்தான் அளவுக்கு செலவு செய்வதில்லை. பாகிஸ்தானோ, பங்களாதேஷோ இஸ்லாமிய நாடாக மாறியதால் அங்கு தேன் மாரி பொழிகிறதா ? கோவையில் குழந்தைகளை கடத்திக் கொன்றது தொடர்பாக குற்றவாளிகளைத் தண்டிக்க அரபு நாடுகளின் சட்டங்களை பின்பற்ற வேண்டும் பொதுமக்கள் சொன்னது இவர்களுக்கு இஸ்லாமிய ஆட்சி முறை இந்தியாவில் நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான அழைப்பாக இருக்கிறதாம்.

குறிப்பிட்ட அந்த இடுகையை கூகுள் பஸ்ஸில் போட்ட போது சில நண்பர்கள் வருத்தம் தெரிவித்தார்கள், ஏன் இவர்களுக்கு விளம்பரம் கொடுக்கிறீர்கள், நீங்கள் விளம்பரம் கொடுப்பதால் நல்லவர்கள் கூட அதைப் படித்து கெட்டுப் போகலாம் இல்லையா ? ஞாயம் தான். தடுப்பு ஊசிப் போட்டுக் கொள்ள நோய் தாக்கி இருக்கத் தேவை இல்லை. இது போன்ற கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால் இது சரிதான் என்பதாக கருத்தாக்கத்தை உருவாக்குபவர்கள் மேலும் மேலும் முயலமாட்டார்களா ?

இந்தியா இந்து நாடாக மாறுதா ? இஸ்லாமிய நாடாக மாறுதா ? என்பது பிரச்சனையில் சுடுகாடு ஆகிவிடாமல் இருந்தால் சரி. இங்கு மதவாதிகள் எவருக்கும் வெட்கமே இல்லை, இதற்கு எந்த மதத்தின்வாதிகளுக்கும் விலக்கு இல்லை. மதச்சார்பின்மைதான் இந்தியர்களின் சிறப்பு என்பதற்கு வேட்டுவைக்க எல்லா மத அமைப்புகளுமே தன்னால் ஆன கெடுதலை செய்தே வருகின்றன. பெரும்பான்மை மக்கள் தொகையை கணக்கில் கொண்டாலும் இந்தியா ஒரு இந்து நாடு அல்ல பலமாகவே முழங்கி மதச்சார்பின்மை போற்றிவரும் வேளையில் இந்தியா இஸ்லாமிய நாடாக மாறிவருதாக புழகாங்கிதப்படுகிறார்கள் ? இந்துக்களிடையே மதச்சார்பின்மை பேசும் பகுத்தறிவாளர்கள் என்போல் ஆயிரம் பேர் உண்டு, இந்தியா இஸ்லாமிய நாடாக மாறிவருகிறது என்று மகிழும் இவர்களை வெளிப்படையாக கண்டிக்க இஸ்லாமியர்கள் முன்வரவேண்டும்.

15 நவம்பர், 2010

தமிழக அரசியல் கலவரம் !

அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான ஊழல் (ஒருலட்சம் கோடியாம், ஒரு லட்சம் என்பதே இந்திய பொது மக்களுக்கு பெரிய விசயம், அதையே கொள்ளையடிக்கும் கோடிகளுக்கு முன்பாக பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது) தொடர்பில் திமுகவிற்கும், காங்கிரசிற்கும் இருக்கும் அரசியல் காதலில் கல் எரியும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் ஜெ. முதலில் லட்சம் கோடிகளுக்கான ஊழல் இதில் இந்திய ஆளும் கட்சிக்குத் தொடர்பே இருக்காது என்பதற்கு ஜெ உத்தரவாதம் கொடுக்கிறார் என்பதாக இதை எடுத்துக் கொண்டு பார்க்கும் போது, ஜெவின் செயல்பாடுகள் ஊழலைக் கண்டிப்பதற்காகவோ, ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்ல, கூட்டணி பலத்துக்கு கட்சி சேர்ப்பு என்பதாகத்தான் கொள்ள முடியும். மேலும் ஜெவுக்கு ஊழல் என்றாலே என்னவென்று தெரியாதா என்று பச்சை குழந்தையிடம் கேட்டால் கூட நகைக்கும். எதிர்கட்சிகள் பெரிய விவகாரம் ஆக்கி நாடாளுமன்ற கூட்டத்தொடர்களை நிறுத்தும் அளவுக்குச் சென்று கொண்டிருக்கும் ஸ்பெக்டரம் இதில் காங்கிரசு கட்சிக்கு தொடர்பே இருக்காது என்றும் பங்கு சேர்ந்திருக்காது என்று நினைப்பதும் அரசியல் அறிவின்மையின் அபத்தமே, காங்கிரசு ராசாவுக்கு நெருக்கடிக் கொடுத்து பதவி விலகச் சொல்லாததற்கு அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் நடை பெற்றிருக்க முகாந்திரமே இல்லை என்று கொள்வதற்கு ஒன்றும் இல்லை. தற்பொழுதி உச்ச நீதிமன்றங்களே இவ்வாகரத்தில் தலையிடுவதால் அரசுகளைக் காப்பாற்றிக் கொள்ள ராசாவே முன்வந்து பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்ததாக அரசியல் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

கழுதைகள் தேய்ந்து கட்டெறும்புகள் ஆகி ஒன்று சேர்ந்து சாரை சரையாகச் சென்றால் தான் சேர்ந்துவாழமுடியும் என்ற கற்பனையை இன்றைய அரசியல் கட்சிகளுக்கு பொறுத்தினால் மிகச் சரியாக இருக்கும் நடுவன் அரசு மற்றும் மாநில அரசு அமைப்பு என்பதில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்பதே இன்றைய அரசியல் சூழல், இதனால் தான் கூட்டணியாக தேர்தல்களை சந்தித்துவருகின்ற அரசியல் கட்சிகள். கூட்டணி பலம் அல்லது மிகப் பெரிய அனுதாப அலை இவையே வெற்றி தோல்விகளை முடிவு செய்யும் நிலைதான் இன்றைய தேர்தல் முடிவுகள். மத்தியில் கூட்டணி ஆட்சி தான் வழி என்றாகிவிட்டபிறகு அதில் கிடைக்கும் அமைச்சர் பதவிகளை தூண்டில் இட்டு தமிழக திராவிடக் கட்சிகளிடையே பேரம் நடத்தி தமிழக சட்டசபையில் கனிசமான இடங்களைப் பெற்றுக் கொண்டே வந்திருக்கிறது காங்கிரஸ். கூடவே காங்கிரஸ் மற்றும் பாமக, விசி ஆகிய கட்சிகள் இணையும் திராவிடக் கட்சிகள் இணைந்து தேர்ந்தலை சந்தித்தால் வெற்றி உறுதி என்பதே தமிழக அரசியலின் பார்முலா. காமராசருக்கு பிறகு காங்கிரஸ் முதல்வர் என்பது கிட்டதட்ட தமிழக அரசியலில் காணல் நீராகிவிட்ட படியால் இந்த முறை தன்னை கூட்டணியில் இணைத்துக் கொள்ள விரும்பும் கட்சிகளுக்கு பலமாகவே செக் வைக்க நினைக்கிறது காங்கிரஸ், கருணாநிதியுடன் கூட்டணி தொடர்ந்தால் 75 இடங்களுக்கு மேலும் பெற்று அதில் 90 விழுகாடு இடம் கிடைத்தால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் அவ்வளவு கிடைக்கவிட்டாலும் திமுக மைனாரிட்டி ஆட்சியாக தொடரவே காங் விரும்புகிறது. ஆலமரமாக வளர்ந்துவிட்ட வாரிசுகள், வாரிசுகளின் செல்வாக்குகளைக் காப்பாற்றிக் கொள்ள கருணாநிதி காங்கிரசின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வதைத் தவிர வேறு வழியும் இல்லை.

ஜெ காங்கிரசுவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார் என்பது காங்கிரசுக்கு அனுகூலம் தான், இதன் மூலம் திமுகவிற்கு நெருக்கடி கொடுத்து மிகுதியான சட்டசபை இடங்களைப் பெற முடியும். இதைத்தான் ஜெவும் எதிர்பார்க்கிறார். காங்கிரசுக்கு நிறைய இடங்களை ஒதுக்குவதன் மூலம் திமுகவினால் பாமக மற்றும் தேமுதிக கட்சிகளை இணைத்துக் கொண்டு அவர்கள் திருப்தி அடையும் அளவுக்கு திமுகவினால் இடம் கொடுக்க முடியாது. இந்த நிலையில் பாமக மற்றும் தேமுதிக கண்டிப்பாக அதிமுகவுடன் இணையவே விருப்பம் தெரிவிக்கும் அதன் மூலம் திமுக - காங் கூட்டணியை எதிர்கொண்டு தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்பதே ஜெ-வின் கணக்கு. தனித்து போட்டியிட்டால் ஒரே ஒரு இடம் தான் கிடைக்கும் என்ற நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களை கூட்ட இந்த முறை தேமுதிக எதாவது ஒரு கூட்டணியில் இடம் பெற்றே ஆகவேண்டிய சூழல். காங்கிரஸ் - திமுக கூட்டணி மறு உறுதிப்படுத்தப்பட்டால் பாமகவும், தேமுதிகவும் அதிமுகவுடன் கைகோர்க்கும், கூடவே கம்யூனிஸ்டுகளின் ஆதரவு, சோ இராமசாமி உள்ளிட்ட பாஜக ஆதரவாளர்களின் மறைமுக ஆதரவு ஆகியவை ஜெவிற்கு சட்டசபை தேர்தலை சந்திக்க நம்பிக்கை ஊட்டியுள்ளது. இராஜிவ் காந்தி மறைவுக்கு பிறகு எந்த ஒரு தேர்தல் அலையும் இல்லாத நிலையில் கூட்டணி பலங்களே வெற்றி பெற்றுவருகின்றன. இலவசத் திட்டங்கள் கனிசமான வாக்கு பெற்றுத் தந்தாலும் அவற்றில் எதையும் பெறாத நடுத்தரவர்க்கத்தினர் வாக்குகளே தேர்தலில் வெற்றி தோல்விகளை முடிவு செய்வதாக உள்ளன. இந்த முறை தேர்தலில் எந்த ஒரு கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது, குதிரை பேரங்கள் வெற்றி பெற்றால் காட்சிகள் மாறலாம், அப்படிப் பார்க்கும் போது திமுகவிற்கே பணபலம் மிகுதி. இருந்தாலும் தமிழகத்தில் எந்த அரசு அமைந்தாலும் இழுபறி அரசாகத்தான் அமையும். திமுக - காங் கூட்டணி இந்த தேர்தலுக்கும் தொடரும் என்றே நினைக்கிறேன். பதிபக்தி இல்லாதவர், அண்டனோ மொய்னோ போன்ற ஜெவின் சோனியா குறித்த தரக்குறைவான சாடல்களை, சோனியா யானை போல் எதையும் மறக்காமல் தன்னைப் போலவே பலிவாங்குபவர் என்பதை ஜெ அறிந்தவர் தான், இருந்தாலும் ஜெவின் காங்கிரசிற்கு வெளிப்படையான ஆதரவு என்பது அதைவைத்து காங்கிரஸ் திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும், கொடுக்க வேண்டும் என்பதே.

11 நவம்பர், 2010

ஒருங்குறி - தினமணி குழப்பம் செய்ய முயற்சி !

தமிழுக்கான ஒருங்குறி புதிய பட்டியலில் புதீ'ய வடமொழி எழுத்துகளை நுழைத்து சர்மா என்பவர் பரிந்துரை செய்ததும் அதை தடுக்க கருணாநிதி முயன்றுவருவதும் பலரும் அறிந்ததே. இதற்கு இடையே தினமணி தலையங்கத்தில் இதனை வேறு மாதிரியாக திரித்து ஜ,ஷ,க்ஷ,ஸ, ஹ எழுத்துகளை ஒருகுறியில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழக அரசும், தமிழக ஆர்வலர்களும் முயற்சிப்பதாக எழுதியுள்ளது. இது ஒருங்குறி பற்றி முற்றிலும் அறியாதவர்களை குழப்பும் முயற்சியாகும், தமிழில் ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் ஜ,ஷ,க்ஷ,ஸ, ஹ (தமிழுக்காக உருவாக்கப்பட்ட வட அல்லது பிற மொழியில் அமைந்த தமிழில் இல்லாத ஒலி அமைந்த சொற்களை ஒலிக்கும் வட்டெழுத்துகள், இவை தமிழ் வடிவம் பெற்றவை, இந்த எழுத்துகளின் ஒலிப்பு எழுத்துகள் இந்திய மொழிகளில் கிரந்த மற்றும் வட்டார மொழி எழுத்துவடிவங்களில் இருக்கிறது என்றாலும் இந்த எழுத்தை தமிழர்கள் தவிர்த்து வேறு எவரும் படிக்க முடியாது, இவை வட எழுத்துகள் என்பது தவறான பொருள், இவை தமிழில் பிற்காலத்தில் புகுத்தப்பட்ட எழுத்துக்கள், இவற்றை முற்றிலும் எடுக்க வேண்டும் என்று எவரும் சொல்லவில்லை, ஆனால் இவற்றின் புழக்கத்தை குறிக்கும் வண்ணம் சொற்களை தமிழ் படுத்தி பயன்படுத்துங்கள் என்றே சொல்கிறார்கள்), தினமணிக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. ஒன்றை அரைகுறையாகப் புரிந்து கொண்டதமின்றி அந்த அரைகுறைப் புரிதலை வைத்து தலையங்கம் தீட்டி தவறான கருத்தை பரப்பி வருகிறது தினமணி

தினமணி தலையங்கத்தின் பகுதி இது கீழே,

"சம்ஸ்கிருத ஒலிப்பே இடம்பெறாத தமிழ்ச் சூழலை உருவாக்குதல் நன்று. ஆனால், தானே மெல்ல வழக்கொழிந்துவரும் 5 வரிவடிவங்களுக்காக உலகம் முழுவதும் இணைய தளத்தில் ஒன்றுபோல அனைத்துத் தமிழருக்கும் பயன்தரக்கூடிய மென்பொருளையே நிறுத்தி வைப்பது சரியல்ல. பெருவாரியான தமிழ் ஆர்வலர்களின் பேரக்குழந்தைகளின் பெயர்களை ஸ,ஷ,க்ஷ,ஜ,ஹ இல்லாமல் உச்சரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பது முதல்வருக்குத் தெரியாதா என்ன? தேவையில்லாத சர்ச்சைகளை தேவையே இல்லாத வேளையில் கிளப்பி, மக்களின் பார்வையைத் திசை திருப்புவது என்பது அரசியல்வாதிகளுக்குக் கைவந்த கலை. இதுவும் அந்த ரகத்தைச் சேர்ந்தது என்பது மட்டும் தெரிகிறது. கண்ணெதிரில் தமிழை விழுங்கும் ஆங்கிலத்தைத் தமிழக அரசும், தமிழ்ச் சமூகமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் செத்துப்போன மொழியின், செத்தஉடலாக இற்றுக்கொண்டுவரும் 5 வரிவடிவங்களுக்காகத் தமிழக அரசு வேட்டியை வரிந்துகட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்கிறது. இதனால் யாருக்கு லாபம்?"


(தமிழக அரசு வேட்டியை வரிந்து கட்டாமல் பஞ்சகச்சத்தை வரிந்து கட்டினால் மகிழ்வார்களோ ?, இதைத்தான் தான் ஆடாவிட்டாலும் தன்னிடம் அனுமதிவாங்கமலேயே தான் அணிந்திருக்கும் பூணூல் ஆடும் என்பார்களோ !)

தினமணி கூறியிருப்பது யாவும் கற்பனையே. ஜ,ஷ,க்ஷ,ஸ, ஹ எழுத்துகளை யாரும் நீக்க வேண்டும் என்று குறிப்பிடாத போது தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் தினமணி ஏற்படுத்துவது எதற்காக யாரை மனநிறைவு செய்ய ? தமிழ் ஒருங்குறியில் சர்மா புகுத்தி முயன்ற புதிய 26 எழுத்துகளைத் தான் கூடாது என்கின்றனர் தமிழறிஞர்கள்.

தினமணியை கண்டனம் செய்து சங்கமித்ரன் என்பவர் எழுதிய இடுகையின் சுட்டி

9 நவம்பர், 2010

கமலஹாசனின் பகுத்தறிவு பேச்சு அலறும் இந்துத்துவாக்கள் !

விஜய் டிவி தீபாவளி நிகழ்ச்சியாக காபி வித் அனுவில் கமல் நிகழ்ச்சியில் கமல் பேசிய பகுத்தறிவு கருத்துகளை தினமலர் யாரோ ஒரு பாண்டே என்பவர் மூலம் சர்சை ஆக்க முயன்றுள்ளது. கமல் நிகழ்ச்சியில் என்ன சொன்னார் ?

1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது,ஆபாசமானது; அர்த்தமற்றது.
2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர்.
3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக்
குடித்துக்கொள்கிறார். என்ன தப்பு?
4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர்.

இதற்கு பாண்டே பதில் கூறுவதாக உளறி இருக்கிறார்

1. படுக்கையறை உணர்வுகளை எப்போதுமே மறைத்து வைக்கத் தெரியாதவர் கமல்ஹாசன். அவருடைய உணர்வுகளும், உறவுகளும் உலகறிந்த விஷயம். அப்படிப்பட்டவர், படுக்கையறை ரகசியங்களை பிறரோடு பகிர்ந்துகொள்ளக் கூடாதுஎன பேசியதே வியப்பு. இருந்தாலும், ஆத்திகவாதிகள் அதை அடக்கி வாசிக்கவேண்டும் என்றால், நாத்திகவாதி ஏன் அதைப் பற்றி, "டிவி'யில் பிரஸ்தாபிக்கிறார்?தனது நாத்திக உணர்வுகளை, தனக்குள்ளேயே வைத்திருக்க வேண்டியது தானே.இவரைப் போன்ற சிலர் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி இத்தகையபிரசாரங்களில் ஈடுபடுவதால் தான், ஆத்திகமும் பீறிட்டு எழ வேண்டியிருக்கிறது.

கமல் போன்ற பெரிய நடிகர்கள் முதல் குத்தாட்ட நடிகைகள் வரை அனைவரின் படுக்கை அறைகளை எட்டிப் பார்த்து திரைச் செய்திகள், துணுக்கு மூட்டை, கிசு கிசு என்பதாக எழுதுவது தினமலர் போன்ற செய்தி / வார இதழ்கள் தன்னிச்சையாக செய்வதே அன்றி, எந்த ஒரு நடிகரும் / நடிகையும் தான் இன்னாருடன் குடித்தனம் நடந்துகிறேன், (கள்ள) உறவு வைத்திருக்கிறேன் என்பதாகச் சொல்லுவதில்லை, இப்பவும் கூட பிரபுதேவா - நயந்தாரா ஆகியோர் பின்னால் மோப்ப நாய்களைப் போல் அலைகிறார்கள். கடவுள் வியாபாரத்தில் பிராச்சாரம் செய்வது தனிமனிதர் ஒருவரின் உரிமை என்றால் அதை மறுப்பதும் அதன் கேடுகள் உணர்ந்து, பிடிக்காத தனிமனிதனின் உரிமை ஆகும். கமல் பொதுத்தளத்தில் நாத்திக பகுத்தறிவு பேசுவது ஆன்மிக வா(ந்)திகளுக்கு பொது இடத்தில் பேசும் உரிமை போன்றது தான்.

2. உலக நாயகனாக இன்று பரிணமித்திருக்கும் நடிகர் கமல், தனது சொந்த ஊர் எதுஎன்று கேட்டால், பரமக்குடியைத் தானே குறிப்பிடுவார்? "யாதும் ஊரே; யாவரும்கேளிர்' என தத்துவம் உதிர்ப்பாரோ. பிரபஞ்சம் முழுக்க இறைவன் வியாபித்திருந்தாலும், தெய்வ சாந்நித்தியம் குவிந்திருக்கும் இடங்கள் என்று சிலஉண்டு. திருப்பதி அவற்றில் ஒன்று. கமலின், "மன்மதன் அன்பு' படம்வெளியாகிவிட்டால், அவரவர் இருந்த இடத்தில் இருந்தே பார்த்துவிட முடியுமா? தியேட்டருக்குச் சென்று தானே பார்க்க வேண்டும்!

எந்த ஒரு தேசியவியாதியும் தான் தமிழன் என்றே சொல்லிக் கொள்ளாத போது, தான் பரமகுடிக்காரன் தமிழகத்தைச் சேர்ந்தவன் என்று சொல்வதில் என்ன தப்பு ? பிரபஞ்ச,ம் முழுவதும் கடவுள் இருக்கிறா இல்லையா என்பதே பிரச்சனை இல்லை, ஒரு மசூதியில் கடவுள் இருப்பதையோ, காஃபாவில் கடவுள் இருப்பதையோ, எருசலேமில் ஏசு அவதரித்தார் என்பதையோ இந்த இந்துத்துவாக்கள் முதலில் நம்புவார்களா ? அது எப்படிங்க பிரபஞ்சம் முழுவதும் இருக்கும் கடவுள் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் இருக்க மாட்டார்?. திரைபடம் திரை அரங்கு போய் தான் பார்க்க வேண்டுமா ? டிவி பெட்டியில் பார்க்க முடியாதா ? வெளிநாடுகளில் படம் வெளியாகும் அன்றே ஒரிஜினல் டிவிடியும் வெளி ஆகிவிடுகிறதே. பாண்டேக்கள் ஒப்பிடு என்றால் திரைப்படத்தையும் கடவுளையும் ஒப்பிடுவாங்க, அதையே மற்றவர்கள் அரசியல் தலைவர்களையும் கடவுளையும் ஒப்பிட்டால் இந்து மதத்தை அவமதித்துவிட்டார்கள் அலறுவார்கள்

3. பெருந்தெய்வங்கள் பற்றியும், குறுந்தெய்வங்கள் பற்றியும், தெய்வ நம்பிக்கையே இல்லாத கமலுக்கு என்ன கவலை? யார், யாரைக் கும்பிட்டால் என்ன? இவர் ஏன்குறுந்தெய்வங்களுக்காக வக்காலத்து வாங்குகிறார்? அப்படி என்றால்,குறுந்தெய்வங்கள் இருப்பதை ஒப்புக்கொள்கிறாரா? இவர் குறிப்பிடுவது போல,எங்கேயாவது குறுந்தெய்வங்களுக்கு, அவமரியாதை நடந்திருக்கிறதா? அல்லது,சுடலை மாடசாமி சாராயம் குடிப்பதைப் பற்றி, பெருந்தெய்வங்களைப் போற்றும்ஆன்மிகத் தலைவர்கள் யாராவது இவரிடம் ஆதங்கப்பட்டார்களா?

இதே போன்று தான் ஆலய நுழைவு போராட்டம் நடத்திய திகவினரிடமும் கடிந்து கொண்டார்கள், நீ சூத்திரன் இல்லை என்றால் மூடிக் கொண்டு போக வேண்டியது தானே, உங்களுக்கு தான் நால்வருண கோட்பாட்டின் மீது நம்பிக்கை இல்லையே, எங்களைப் பொறுத்த அளவில் சூத்திரன் உண்டு அவன் தீண்டத் தகாதவன் கோவிலுக்குள் விடமாட்டோம் என்றார்கள். ஒரு அநியாயத்தை தட்டிக்கேட்க பாதிக்கப்பட்டவனாகத்தான் இருக்கனுமாம். பாதிக்கப்பட்டவனுக்காக எவரும் பேசக் கூடாதாம். அடங்கொக்கா மக்கா ஜெயலலிதா ஆடுகோழி பலி இட தடை போட்டத்தை இவனுங்க வசதியாக மறந்துட்டு நாமும் மறந்திருப்போம் என்றே பேசுறானுங்க. ஆடுகோழி வெட்ட சுடுகாட்டிற்கெல்லாம் சென்று மறைந்து நின்று பலி இட்ட நிகழ்வும் அதை தமிழக போலிசார் ஒட ஓட விரட்டி பிடித்து வழக்கு பதிவு செய்த நிகழ்வும் தமிழகத்தில் தானே நடந்தது. விராலி மலை முருகனுக்கு சுருட்டு படைக்கக் கூடாது என்று இன்னும் தடை வரவில்லை :). ஆன்மிகத் தலைவர்கள் ஆதங்கப்பட்டு ஜெ வை அத்தகைய சட்டம் போடுவது வழிபாட்டு உரிமையை பறிப்பதாகும் என்று சொல்லி தடுத்திருக்கலாமே. இல்லாத ஒன்றை இந்து மதம் என்பது போலவே பார்பனர் வழிபாட்டு முறைகளை அனைவருக்கும் பொதுவானது என்று கூறுவது முட்டாள் தனமன்றோ.

4. ஆகம விதிகள் என்பது, அறிவியலை மையமாகக் கொண்டது. ஃபைவ் ஸ்டார்ஓட்டலில் ரூம் போட்டு, பலான பலான சரக்குகளோடு எழுதப்படும் திரைக்கதைபோன்றது அல்ல. அது தவிர, தங்கள் கோவில் எப்படி கட்டப்பட வேண்டும் என்பது,கோவில் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயமே தவிர,பகுத்தறிவுப் புலிகளுக்கு இதில் வேலை இல்லை. தன்னுடைய வீட்டை, என்விருப்பப்படி கட்டுவாரா? தன் விருப்பப்படி கட்டுவாரா கமல்? "ஏழைகுடிசைவாசிகளின் ஏக்கத்தைப் புறக்கணித்து, பங்களா கட்டிக்கொண்டுள்ளார் கமல்'என புகார் சொன்னால், அதை நியாயம் என்பாரா ?

ஆகமவிதி கோயி(லி)ல் கருவரையில் தான் தேவநாதன் ஆணுறைகளை கழட்டிப் போட்டான். ஆகமவிதிகள் எதையும் கடைபிடிக்காத கண்ணப்பனுக்குத்தான் அருளினான் என்று பெரிய புராணத்திலேயே வருகிறதே. சிவ ஆகமங்கள் அனைத்தும் சிதம்பரத்தில் கரையான் அரிக்க பூட்டப்பட்டு நம்பியாண்டார் நம்பி தலைமையில் அதை மீட்டெடுத்தான் இராஜராஜன் என்று தான் வரலாறு சொல்லுகிறதே. ஆகம விதி என்றால் என்ன ? தற்போதைக்கு பார்பனர் வடமொழியில் அருச்சனை செய்வது அதுவும் அவர்கள் மட்டுமே செய்வது இதைத்தானே ஆகமம் என்று கூறுகின்றார்கள். முக்தி என்ற பெயரில் நந்தனார் எரிக்கப்பட்டதாக...இவர்களின் ஆகமவிதிப்படி சூத்திரன் கோவிலுக்குள் நுழையக்கூடாது. இது போன்ற ஆகமவிதிகளை அடுப்பில் பொசுக்கி ஆண்டுகள் கடந்துவிட்டதே.


இணைப்பு : இரண்டாவது பெரியாராக முழங்கிய கமல் (தினமலர்)

விஜய் தொலைகாட்சியின் காணொளி:

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்